4 அல்லது 5 கோடிக்கு மேல் அஸ்வின் மீது சி.எஸ்.கே செலவு செய்யாது : அனில் கும்ளே
சென்னை வந்த எம்.எஸ்.தோனி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை எனது இரண்டாவது வீடு போன்றது.
சென்னை அணிக்கு நான் தேர்வு செய்யப்பட்டதை பெருமையாக நினைக்கிறேன். ரசிகர்கள் அனைவருமே எப்போது சென்னை அணி திரும்பும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். எப்போதுமே சென்னை எனக்கு, தனி சிறப்பு வாய்ந்தது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்குதான் அதிக ஸ்கோரை நான் பதிவு செய்தேன். சென்னை அணியின் சிறப்பே, அனைத்து வீரர்களும் தங்களது முழுத் திறமையை வெளிப்படுத்தும் சூழல் இங்கு எப்போதும் இருக்கும் என்பதுதான்.. கிரிக்கெட்டில் ஏற்ற இறக்கம் இருக்கத்தான் செய்யும். கடினமான தருணங்களை சிறப்பாக எதிர்கொண்டுள்ளோம்.
நான் விக்கெட் கீப்பராக இருபது அணியை வழிநடத்த உதவும். தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை ஏலத்தில் எடுக்க இருக்கிறோம். 2 வருடங்கள் சென்னை அணிக்காக விளையாட முடியாதது வருத்தம் அளித்தாலும் நிறைய விஷயங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது.
இரண்டு வருடம் விளையாடா விட்டாலும் ரசிகர்களின் வரவேற்பு அதிகரித்திருக்கிறது. அணியில் 18-ல் இருந்து 20 வீரர்களை தேர்வு செய்ய இருக்கிறோம்.
இவ்வாறு தோனி கூறினார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் அனில் கும்ளே ஒரு வித்தியாசமான செய்தியை கூறியுள்ளார்,
சென்னை அணி ஜடேஜாவிற்கு ஒரு பேக் அப் ஸ்பின்னரை தேடி வருகிறது. இதனால அவருக்கு இரு பேக் அப் வீரரை தான் எடுக்கும். அஷ்வினை எடுத்தால் கூட அவர் இரண்டாவது ஸ்பின்னராக தான் இருப்பார். ஆனால், அஸ்வினுக்காக 5 கோடிக்கு மேல் செலவு செய்யாது சென்னை.
எனக் கூறினார் அனில் கும்ளே.