ஐ.சி.சி., சொல்லட்டும் அப்பறம் பாத்துக்கலாம்; காத்திருக்கும் ஹைதராபாத் !!

ஐ.சி.சி., சொல்லட்டும் அப்பறம் பாத்துக்கலாம்; காத்திருக்கும் ஹைதராபாத்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னர் மீதான ஐ.சி.சி.,யின் இறுதி முடிவுக்கு பிறகே ஹைதராபாத் அணியில் வார்னர் கேப்டனாக நீடிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று ஹைதராபாத் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கேப்டவுனில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது. அவர் பந்தை சேதப்படுத்திய எனக்குத் தெரியும் என ஸ்மித் ஒப்புதல் அளித்தார். இதனால் அவரது கேப்டன் பதவிக்கு ஆபத்து நேரிட்டது.

ஆஸ்திரேலியா அரசு உடனடியாக ஸ்மித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு பரிந்துரை செய்தது. இதனால் கேப்டன் ஸ்மித் மற்றும் துணைக் கேப்டன் வார்னர் ஆகியோர் கேப்டன் பதவிகளில் இருந்து விலக சம்மதம் தெரிவித்தனர். இதனால் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

அடுத்த மாதம் 7-ந்தேதி இந்தியாவில் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதில் ஆஸ்திரேலியா வீரர்களின் பங்கு முக்கியமானது. ஸ்மித் மற்றும் வார்னர் மார்க்யூ வீரர்கள். ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகவும், வார்னர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாகவும் உள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஸ்மித் விலகுவதாக அறிவித்ததார். இதனால் ரகனோ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் வார்னர் நிலை குறித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் சுதர்லலேண்டு தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்து குழு விசாரணை நடத்தி முடிவு வெளியிட்ட பின்னர்தான், நாங்கள் வார்னர் குறித்து முடிவு செய்வோம் என அந்த அணியின் ஆலோசகர் லஷ்மண் தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.