ரிஷப் பண்ட் இல்லை; அதிரடி மாற்றங்களுடன் முதலில் பேட்டிங் செய்கிறது டெல்லி !!

ரிஷப் பண்ட் இல்லை; அதிரடி மாற்றங்களுடன் முதலில் பேட்டிங் செய்கிறது டெல்லி

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய நாளுக்கான இரண்டாவது போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

அபுதாபியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியில், காயம் காரணமாக ரிஷப் பண்ட் விளையாடாததால் அவருக்கு அலெக்ஸ் ஹேரி அணியில் இடம்பெற்றுள்ளார். அதே போல் ஹெய்ட்மர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அஜிக்னியா ரஹானே அணியில் இடம்பெற்றுள்ளார்.

அதே வேளையில் மும்பை இந்தியன்ஸ் அணி எந்த மாற்றமும் இல்லாமல் இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணி;

குவிண்டன் டிகா, ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, கீரன் பொலார்டு, க்ரூணல் பாண்டியா, ஜேம்ஸ் பட்டின்சன், ராகுல் சாஹர், டிரண்ட் பவுல்ட், ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.

இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணி;

ப்ரித்வி ஷா, ஷிகர் தவான், ரஹானே, ஸ்ரேயஸ் ஐயர், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்‌ஷர் பட்டேல், ஹர்சல் பட்டேல், ரவிச்சந்திர அஸ்வின், காகிசோ ரபாடா, அன்ரிக் நார்ட்ஜே.

Mohamed:

This website uses cookies.