ஐபிஎல் 2022; டாஸ் வென்ற பஞ்சாப் அணி… முதலில் பேட்டிங் செய்கிறது பெங்களூர் அணி !!

பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

15வது ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டியான இன்றைய போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

மும்பை டி.வி பட்டீல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மாயன்க் அகர்வால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான பெங்களூர் அணியில், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், ரூத்தர்போர்ட், டேவிட் வில்லே, சபாஷ் அகமத், ஹசரங்கா, ஆகாஷ் தீப் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த போட்டிக்கான பெங்களூர் அணி;

டூபிளசிஸ், அனுஜ் ராவத், விராட் கோலி, ருத்தர்போர்ட், தினேஷ் கார்த்திக், டேவிட் வில்லே, சபாஷ் அகமத், வானிடு ஹசரங்கா, ஹர்சல் பட்டேல், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.

இந்த போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணி;

மாயன்க் அகர்வால், ஷிகர் தவான், லியம் லிவிங்ஸ்டோன், பனுகா ராஜபக்சே, ஷாருக் கான், ஓடின் ஸ்மித், ராஜ் பவா, அர்ஸ்தீப் சிங், ஹர்ப்ரீட் பிரார், சந்தீப் சர்மா, ராகுல் சாஹர்.

 

 

Mohamed:

This website uses cookies.