மீண்டும் ஐபிஎல் அணிக்குள் நுழையும் வீரர்கள்! நிம்மதிப்பெருமூச்சுவிடும் ஐபிஎல் அணிகள்!

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டு பாதி போட்டிகள் நடைபெற்ற நிலையில் போட்டியில் பங்கெடுத்த வீரர்கள் ஒரு சிலருக்கு கொரோனா வந்த காரணத்தினால் போட்டி பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என்று பிசிசிஐ கூறியிருந்த நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கப்பட்டு அக்டோபர் 15-ஆம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இனியும் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க போவதில்லை என்கிற செய்தி நிர்வாகிகளை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. சர்வதேச தொடர்களில் அவர்கள் பிஸியாக இருக்கப் போவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்தந்த நாட்டு கிரிக்கெட் நிர்வாகிகள் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நியூசிலாந்து அணி வீரர்கள் ஒரு சிலர் ஐபிஎல் தொடரில் பங்கெடுத்து விளையாடப் போவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அந்த தகவலை நியூசிலாந்து அணி கிரிக்கெட் தலைமை அதிகாரி டேவிட் ஒயிட் உறுதிபடுத்தியுள்ளார்.

கேன் வில்லியம்சன் உள்ளிட்ட சில வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க போவதாக வந்த தகவல்

கேன் வில்லியம்சன், ஜிம்மி நீஷம், டிரென்ட் போல்ட், லோக்கி ஃபெர்குசன் இந்த வீரர்கள் அனைவரும் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் அவர்களது அணியில் பங்கெடுத்து விளையாடுவார்கள் என்று தற்பொழுது நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை அதிகாரி டேவிட் ஒயிட்
சமீபத்தில் கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான சர்வதேச போட்டிகளில் நியூசிலாந்து அணி பங்கேற்க போவதால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் நியூசிலாந்து அணி வீரர்கள் பங்கெடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று முன்னரே நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் பதில் அளித்து இருந்தது. ஆனால் தற்பொழுது இந்த வீரர்கள் மட்டும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் ஐபிஎல் தொடரில் பங்கேற்க போவதாக கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அதிகாரி டேவிட் தற்போது கூறியுள்ளார்.

உலக கோப்பை டி20 தொடருக்கான பயிற்சியாக ஐபிஎல் தொடர் இருக்கும் என நியூசிலாந்து வீரர்கள் ஆலோசனை

உலக கோப்பை டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னரே ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளதால், நியூசிலாந்து அணி வீரர்கள் ஒரு சிலர் ஐபிஎல் தொடரில் பங்கெடுத்து விளையாடினால் அது உலக கோப்பை தொடரில் விளையாட நல்ல அனுபவமாக இருக்கும். மேலும் இது ஒரு பயிற்சி ஆட்டம் அமையும் என்றும் ஆலோசனை தெரிவித்ததாக தற்போது தெரியவந்துள்ளது.

அவர்களின் ஆலோசனையை ஏற்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், அதன்படி கேன் வில்லியம்சன் உள்ளிட்ட ஒரு சில வீரர்கள் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் நிச்சயமாக பங்கெடுத்து விளையாட போவதாகவும் தற்போது தகவல் உறுதியாகியுள்ளது. இந்த செய்தி நியூசிலாந்து அணி வீரர்கள் பங்கேற்க போகும் அணிகளையும் அந்த அணியின் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.