முன்னாள் இந்திய வீரர்ருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிய பதவி! ரசிகர்கள் அதிர்ச்சி!

ஐபிஎல் தொடரை பொருத்தவரையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களை ஊக்குவிப்பதில் ஒரு படி முன்னே இருக்கும். நிறைய மாற்றங்களையும் நிறைய புதிய விஷயங்களையும் தனது அணி நிர்வாகம் மூலமாக எடுத்து, வீரர்களின் மன உறுதியையும் நம்பிக்கையையும் அதிகப்படுத்துவதில் அந்த அணி பிரசித்தி பெற்றது. 2013ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரை கைப்பற்றிய பின்னர் தற்போது வரை ஐந்து ஐபிஎல் கோப்பையை அந்த அணி கைப்பற்றியுள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்த அணி தொடர்ச்சியாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது மும்பை அணி நிர்வாகம் வினய் குமாரை புதிய திறமை கண்டறியும் குழுவின் தலைவராக ஆக தேர்ந்தெடுத்து உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இளம் வீரர்களை நன்கு கண்காணித்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் பலத்தை அதிகரிக்க உதவும் பட்சத்தில் இந்த பணி அவருக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

17 வருடமாக முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் அவர் இரண்டு முறை கர்நாடக அணியை கேப்டனாக வழிநடத்தி ரஞ்சி டிராபி தொடரை கைப்பற்றி கொடுத்துள்ளார். மேலும் நிறைய போட்டிகளில் மிக சிறப்பாக அவர் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2015 மற்றும் 2017ம் ஆண்டுகளில் தன்னுடைய சிறந்த பங்களிப்பினை வழங்கி உள்ளார். அந்த இரு ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவரால் இனி சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்கு விளையாட முடியாது. இருப்பினும் அவருக்கு ஒரு புதிய பணி தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் மூலமாக கிடைத்துள்ளது. திறமையான இளம் வீரர்களை தேடி கண்டுபிடித்து அவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை மும்பை இந்தியன்ஸ் அணியில் ஊக்குவித்து விளையாட வைப்பது அவருடைய புதிய பணி. இந்தப் பணியை செய்ய அவர் ஆர்வமாக உள்ளதாகவும் சமீபத்தில் அவர் கூறியுள்ளார்.

அனுபவம் வாய்ந்த வீரரான வினய் குமார் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்த பணியை ஏற்றுக் கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவரது தலைமையில் உள்ளூர் போட்டிகளில் நிறைய இளம் வீரர்களுக்கு நல்ல அறிவுரையை அவர் வழங்கியுள்ளார். போட்டி குறித்து நிறைய அனுபவம் அவருக்கு இருக்கும் பட்சத்தில் அவருடைய அனுபவம் மும்பை இந்தியன்ஸ் அணியில் இனி வரும் கால கட்டத்தில் இளம் வீரர்களுக்கு உதவும். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் பங்கு பெற்று வேலை செய்யப் போவது மகிழ்ச்சியாக உள்ளது என்று ஆகாஷ் அம்பானி தற்பொழுது கூறியுள்ளார்.

Prabhu Soundar:

This website uses cookies.