ஒரு வாய்ப்பாவது கொடுங்க… திறமை இருந்தும் சென்னை அணியில் இருந்து ஓரங்கட்டப்படும் மூன்று வீரர்கள் !!

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் வெறும் 2 போட்டியில் மட்டும் தான் வெற்றியடைந்துள்ளது. எஞ்சியுள்ள ஐந்து போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதே கடினம் என்ற நிலையில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் கடைசி ஓவரில் மிரட்டல் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்ததாக இன்று (25-4-22) நடைபெறும் போட்டியில் மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

கடந்த வருட ஐபிஎல் தொடர்களை போன்று இல்லாமல், இந்த வருட ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் அதிகமான இளம் வீரர்களை எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதில் ஓரிருவரை தவிர மற்றவர்களுக்கு பெரிதாக வாய்ப்பு கொடுப்பது இல்லை.

அப்படியாக, திறமை இருந்தும் சென்னை அணியின் ஆடும் லெவனில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்படும் மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

டெவன் கான்வே;

நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான டெவன் கான்வே டூபிளசிஸியின் இடத்தை சரியான நபர் என்றே எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் சென்னை அணி கான்வேவிற்கு இந்த தொடரில் இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு கொடுத்துள்ளது. முதல் போட்டியில் சொதப்பியதால் அவரை ஆடும் லெவனில் இருந்து முழுமையாக நீக்கிய சென்னை அணி, ராபின் உத்தப்பாவை துவக்க வீரராக களமிறக்கி வருகிறது. கான்வேவிற்கு சரியான வாய்ப்பு கிடைத்தால் அது நிச்சயம் சென்னை அணியின் பேட்டிங் ஆர்டருக்கு கூடுதல் வலு சேர்க்கும் என்பதே கிரிக்கெட் வல்லுநர்கள் பலரின் கருத்தாக உள்ளது.

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

Mohamed:

This website uses cookies.