போதும் கிம்புங்க… அடுத்த போட்டிக்கு முன்பு சென்னை அணியில் செய்யப்பட வேண்டிய மூன்று முக்கிய மாற்றங்கள் !!

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அனி, 15வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் தடுமாறியது. டூவைன் பிராவோ, ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் சிறப்பாக பந்துவீசினாலும், மற்றவர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்படவில்லை. பேட்டிங்கிலும் சிவம் துபே, ருத்துராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே ஆகியோர் மிக மோசமாக செயல்பட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த போட்டியில் மிக மோசமான தோல்வியை தழுவி, இந்த தொடரை தோல்வியுடன் துவங்கியுள்ளது.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மார்ச் 31ம் தேதி நடைபெறும் தனது அடுத்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில், இந்த போட்டிக்கு முன்னதாக சென்னை அணியில் செய்யப்பட வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

1 – மொய்ன் அலி – மிட்செல் சாட்னர்;

விசா கிடைப்பதில் தாமதமானதால் சென்னை அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மொய்ன் அலி, கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடவில்லை. இவருக்கு பதிலாக சென்னை அணியில் இடம்பெற்ற மிட்செல் சாட்னர் ஒரு விக்கெட் வீழ்த்தி கொடுத்தாலும், அடுத்த போட்டியில் இவரை விட மொய்ன் அலியை எடுப்பதே சென்னை அணிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. மொய்ன் அலி கடந்த தொடரில் சென்னை அணியின் வெற்றியில் மிக முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

Mohamed:

This website uses cookies.