வேலைக்கு ஆகாத சிவம் துபே… சென்னை அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் !!

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த வருடத்திற்கான தொடரை தோல்வியுடன் துவங்கியுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில், பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சொதப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் போட்டியிலேயே மோசமான தோல்வியை சந்தித்தது.

முதல் போட்டிக்கான சென்னை அணியின் இடம்பெற்றிருந்த சில வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட விளையாடவில்லை என்பதால், அடுத்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஓரிரு மாற்றங்கள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இளம் ஆல் ரவுண்டரான சிவம் துபே அடுத்த போட்டிக்கான சென்னை அணியில் இருந்து கழற்றிவிடப்படுவார் என்றே தெரிகிறது.

சிவம் துபே சென்னை அணியில் இருந்து நீக்கப்பட்டால் அவருக்கு பதிலாக சென்னை அணியின் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

டூவைன் பிரடோரியஸ்;

தென் ஆப்ரிக்காவின் ஆல் ரவுண்டரான டூவைன் ப்ரடோரியஸ் சிவம் துபேவிற்கு பதிலாக களமிறங்க முழு தகுதியானவர். தென் ஆப்ரிக்கா அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான இவர், இதுவரை விளையாடியுள்ள 22 டி.20 போட்டிகளில் 170 ரன்கள் குவித்ததோடு, 23 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். சிவம் துபேவிற்கு பதிலாக இவரை எடுத்தால் அது சென்னை அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என்பதே கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாகவும் உள்ளது.

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

Mohamed:

This website uses cookies.