2022 ஐபிஎல் தொடரில் ஒரு அணி 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற விதி இருப்பதால் ஒவ்வொரு அணியும் தனது அணிக்கு தேவைப்படும் மிக முக்கியமான வீரர்களை தக்க வைத்துள்ளது.
சில வீரர்கள் சிறப்பாக செயல்பட்ட போதும் அவர்களை அணியில் தக்க வைக்க முடியாததால், அவர்களை அணியிலிருந்து நீக்கிவிட்டது, இந்த நிலையில் வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் தனது அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட வீரர்களை மீண்டும் தனது அணியில் இணைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கும் 4 வீரர்களை பற்றி இங்கு காண்போம்.
இஷான் கிஷன் (மும்பை இந்தியன்ஸ்)
மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷன் கிஷன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல முறை சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
பல இக்கட்டான நிலையிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தனது அபாரமான பேட்டிங் திறமையால் உதவிய இவரை 2022 ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது அணியில் தக்க வைக்கவில்லை, இருந்தபோதும் 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இவரை மீண்டும் தனது அணியில் இணைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.