வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் காயம் ஏற்பட்டதால் தொடரில் இருந்து விலகிய தீபக் சஹர், காயம் சரியாகாததால் இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் பங்கு கொள்ளவில்லை.
தீபக் சஹர் காயத்திலிருந்து குணமடைவாரா.., எதிர்வரும் ஐபிஎல் தொடரில் தீபக் சஹர் பங்கு பெறுவாரா..? மாட்டாரா..? என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை, சென்னை அணிக்காக 14 கோடி ரூபாய் ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட தீபக் சஹர், ஒருவேளை ஐபிஎல் தொடரில் பங்கு கொள்ளவில்லையென்றால், சென்னை இந்த 5 வீரர்களில் ஒருவரை அணியில் இணைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஷாந்த் ஷர்மா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்பொழுதும் அனுபவம் வாய்ந்த வீரர்களை தனது அணியில் இணைப்பது வழக்கம். அந்த வகையில் ஏற்கனவே தோனியின் தலைமையின் கீழ் விளையாடிய இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவை சென்னை அணி, தீபக் சஹர்க்கு பதில் தேர்ந்தெடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அணியின் ஸ்டைலே, மிகவும் அதிரடியான வீரர்களை தேர்ந்தெடுக்காமல் அனுபவ வீரர்கள் தேர்ந்தெடுப்பது தான் என்பது குறிப்பிடத்தக்கது.