2022 ஐபிஎல் தொடருக்கான ஏலம் இந்த வருடம் நவம்பர் மாத இறுதியில் நடைபெற இருப்பதால் அனைத்து அணிகளும் எந்த வீரரை அணியில் இணைக்கலாம் எந்த வீரரை அணியில் இருந்து நீக்கலாம் எந்த வீரரை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற திட்டங்களை வகுத்து வருகிறது.
அதில் குறிப்பாக 2021 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தான் கோப்பையை வெல்லும் என்று அனைவராலும் பேசப்பட்டு வந்த நிலையில் இந்த தொடரில் முதல் ஆளாகவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெளியேறியது இதனால் வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் தான் செய்த தவறு என்ன என்பதை நன்கு உணர்ந்தும் அணியை வழி நடத்தக்கூடிய தகுதி படைத்த சிறந்த வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முனைப்போடு உள்ளது.
இதனால் வருகிற இடத்தில் இந்த மூன்று வீரர்களை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டார்கெட் செய்யும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அப்படிப்பட்ட 3 வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்
கே எல் ராகுல்
2021 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ராகுல் மிக சிறந்த முறையில் விளையாடி அதிகமான ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தார். இருந்தபோதும் பஞ்சாப் கிங்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.
என்னதான் கேஎல் ராகுல் மிக சிறந்த முறையில் விளையாடினாலும் அணியில் இருக்கக்கூடிய மற்ற வீரர்கள் அவருக்கு ஒத்துழைக்காத அதன் காரணமாக பஞ்சாப் அணி முன்னேற முடியாமல் உள்ளது. இதன் காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இருந்து விலகி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கே எல் ராகுல் தனது அணியில் இணைத்துக் கொள்வதற்கு அனைத்து வகையான முயற்சிகளையும் செய்யும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.