ருத்ராஜ் கெய்க்வாட்டை தனது அணியில் இணைப்பதற்கு திட்டம் தீட்டும் 3 அணிகள் குறித்து இங்கு காண்போம்.
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், அனைத்து அணிகளும் எந்த வீரரை தக்கவைத்து கொள்ளலாம்..?எந்த வீரரை அணியிலிருந்து நீக்கலாம்..? எந்த புதிய வீரர்களை அணியில் இணைக்கலாம்…? என்ற திட்டங்களையும் வியூகங்களையும் வகுத்து வருகிறது.
மேலும் கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தங்களது அணியில் வளைத்துப் போடும் திட்டத்தை ஒவ்வொரு அணியும் மிகத் தீவிரமாக யோசித்து வருகிறது, அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகமாகி அதிரடியாக விளையாடிய சென்னை அணியின் துவக்க வீரர் ருத்ராஜ் கெய்க்வாட்டை ஒருவேளை சென்னை அணி தக்க வைத்துக் கொள்ளவில்லை என்றால்,இந்த மூன்று அணிகள் தான் அவரை தங்களது அணியில் இணைப்பதற்கு முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி சென்னை அணியின் துவக்க வீரர் ருத்ராஜை தனது அணியில் இணைக்க முயற்சி செய்யும் மூன்று அணிகளை பற்றி இங்கு காண்போம்.
பஞ்சாப் கிங்ஸ்
ஒருவேளை கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படுவது போல் கேஎல் ராகுல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து விலகி வேறு ஒரு அணியில் இணையபோகிறார் என்ற புரளி உண்மையாகும் பட்சத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடியாக செயல்படும் நட்சத்திர துவக்க வீரர் ஒருவரை தனது அணியில் இணைப்பதற்கான முயற்சிகளைச் செய்யும்.
அப்படி கே எல் ராகுல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து விலக வில்லை என்றாலும் பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை அணியின் துவக்க வீரர் ருத்ராஜ் மீது தனது ஆர்வத்தை காட்டி வருகிறது, இதன் காரணமாக வரும் 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பஞ்சாப் அணி ருத்ராட்சை தனது அணியில் இணைப்பதற்கு முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.