ஐபிஎல் 2022 ; மாஸான அறிவிப்பை வெளியிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி; மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!

2022 ஐபிஎல் தொடருக்கான பயிற்சி முகாமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்பொழுது.? எங்கே நடத்தும்.? என்ற அறிவிப்பை வெளியிட்டது.

உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவுடன் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்த தொடரில் இதுவரை மொத்தம் 14 சீசன்கள் நிறைவடைந்துள்ளன.


கடந்த வருடம் நடைபெற்ற தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வருடத்திற்கான தொடரில் கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கான மெகா ஏலம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்து, புதிய அணியை கட்டமைத்துள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடர் மார்ச் மாத இறுதியில் நடைபெறும் என்பதால் ஒவ்வொரு அணிகளும் தனது அணிக்கான பயிற்சியை எப்பொழுது தொடங்கலாம் என்று திட்டமிட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மார்ச் இரண்டாம் தேதி பயிற்சி முகாமை (Practice Camp) துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் சென்னை அணியின் நட்சத்திர வீரர்களான தோனி, ஜடேஜா பிராவோ போன்ற வீரர்கள் உட்பட இந்தியா மற்றும் அயல்நாட்டு வீரர்கள் என சென்னை அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வீரர்களும் பங்கு பெறுவார்கள் என்றும் இந்தப் பயிற்சி சூரத் மைதானத்தில் நடைபெறும் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே பயிற்சி முகாமை நடத்தும் சென்னை அணி, தற்பொழுது ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் ஒரு சில வாரங்களுக்கு முன் பயிற்சியை துவங்கி இருப்பது சென்னை ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதற்கான காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வாகி இருக்கும் வீரர்கள் தனது சொந்த நாட்டிற்காக விளையாடி வருகிறார்கள் இதனால்தான் சென்னை அணி இந்த முடிவை எடுத்திருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Mohamed:

This website uses cookies.