ஸ்ரேயாஸ் ஐயரை டார்கெட் செய்யும் 3 அணிகள் குறித்து இங்கு காண்போம்
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், அனைத்து அணிகளும் எந்த வீரரை தக்கவைத்து கொள்ளலாம்..?எந்த வீரரை அணியிலிருந்து நீக்கலாம்..? எந்த புதிய வீரர்களை அணியில் இணைக்கலாம்…? என்ற திட்டங்களையும் வியூகங்களையும் வகுத்து வருகிறது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை கேப்டனாக பொறுப்பேற்று திறம்பட வழிநடத்திய முன்னாள் கேப்டன் ஷ்ரெயஸ் ஐயரை முக்கியமான 3 அணிகள் தனது அணியில் இணைப்பதற்கு முயற்சி செய்து வருகிறது.
அப்படிப்பட்ட 3 அணிகள் குறித்து இங்கு காண்போம்
பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் அணி வருகிற 2022 ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் மீது தனது முழு கவனத்தையும் செலுத்தும் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஏனென்றால் வருகிற ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட கே எல் ராகுலை தக்கவைக்காது என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது,இதனை கருத்தில் கொண்டு தான் கிரிக்கெட் வல்லுனர்கள் அவ்வாறு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.