சிஎஸ்கே ரசிகர்களுக்கு முக்கியமான அப்டேட்… லக்னோ அணியுடன் நடக்கவுள்ள மேட்ச் தேதியில் மாற்றம்! – புதிய தேதி அறிவிப்பு!

லக்னோ மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதவிருந்த லீக் போட்டி வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. எந்த தேதியில் நடைபெறுகிறது? மற்றும் மாற்றத்திற்கான காரணம் என்ன? ஆகியவை பற்றி பின்வருமாறு காண்போம்.

கடந்த மார்ச் 31ஆம் தேதி துவங்கி 2023 ஐபிஎல் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட ஐந்து லீக் போட்டிகளில் விளையாடி முடித்துவிட்டன.

ராஜஸ்தான் ராயல்ஸ் 5 போட்டிகளில் நான்கு வெற்றிகள் பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. லக்னோ, சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்கள் முறையே ரன்ரேட் அடிப்படையில் இருக்கின்றன.

சிஎஸ்கே அணி கடைசியாக நடைபெற்ற லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து சிஎஸ்கே அணி வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற உள்ள லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

லக்னோ-சென்னை போட்டியில் மாற்றம்

இந்த வருட ஐபிஎல் தொடரின் 46ஆவது லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில்  மே மாதம் 4ஆம் தேதி நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டு ஏப்ரல் 3ஆம் தேதிக்கு போட்டி மாற்றப்பட்டுள்ளது. லக்னோவில் மாநகராட்சி தேர்தல் நடைபெறுவதால் போட்டிகளில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன என்று லக்னோ அணியின் தரப்பில் இருந்து தகவல்கள்  வந்திருக்கிறது.

ஏற்கனவே இந்த இரு அணிகளும் மோதிய லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அதிக ஸ்கோர்கள் அடித்த போட்டியாக இது அமைந்தது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்கள் அடித்தது. இந்த இமாலய இலக்கை சேஸ் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் அதே 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே அடித்தது. இறுதியில் சிஎஸ்கே அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

Mohamed:

This website uses cookies.