பந்துவீச்சில் கச்சிதமாக செயல்பட்ட குஜராத் வீரர்கள்… தடுமாறிய சென்னை பேட்ஸ்மேன்கள்; குஜராத்திற்கு எளிய இலக்கு !!

பந்துவீச்சில் கச்சிதமாக செயல்பட்ட குஜராத் வீரர்கள்… தடுமாறிய சென்னை பேட்ஸ்மேன்கள்; குஜராத்திற்கு எளிய இலக்கு

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் குவாலிபயர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.

கடந்த மார்ச் மாத இறுதியில் துவங்கிய 16வது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவில் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை ஆகிய நான்கு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

இதில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் குஜராத் – சென்னை இடையேயான முதல் குவாலிபயர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான ருத்துராஜ் கெய்க்வாட்டும், டீவன் கான்வேவும் சுமாரான துவக்கம் கொடுத்தனர். ருத்துராஜ் கெய்க்வாட் 44 பந்துகளில் 60 ரன்களும், பொறுமையான பேட்டிங்கை வெளிப்படுத்திய டீவன் கான்வே 34 பந்துகளில் 40 ரன்களும் எடுத்து கொடுத்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிவம் துபே 1 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக களத்திற்கு ரஹானே மற்றும் அம்பத்தி ராயூடு ஆகியோர் தலா 17 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். சென்னை அணியின் கேப்டன் தோனி 1 ரன்னிலும், ஜடேஜா 22 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். இதன் மூலம் போட்டியின் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 172 ரன்கள் எடுத்துள்ளது.

குஜராத் அணி சார்பில் அதிகபட்சமாக மோஹித் சர்மா மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

Mohamed:

This website uses cookies.