கிடைத்த வாய்ப்பை தக்க வைக்குமா பெங்களூர் அணி..? முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது ராஜஸ்தான் !!

கிடைத்த வாய்ப்பை தக்க வைக்குமா பெங்களூர் அணி..? முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது ராஜஸ்தான்

பெங்களூர் அணியுடனான எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் புள்ளி பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.

அஹமதாபாத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் முதலில் பந்ந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

தொடர்ச்சியாக 6 போட்டிகளில் பெற்ற மிரட்டல் வெற்றியுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற பெங்களூர் அணி, தனது ஆடும் லெவனில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர்.

அதே வேளையில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது ஆடும் லெவனில் ஒரு மாற்றம் செய்துள்ளது. ரோவ்மன் பவல் மீண்டும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆடும் லெவன்;

விராட் கோலி, டூபிளசிஸ், ராஜத் படித்தர், கேமிரான் க்ரீன், கிளன் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், மஹிபால் லம்ரோர், கரண் சர்மா, யஸ் தயால், முகமது சிராஜ், லோகி பெர்குசன்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆடும் லெவன்;

யசஸ்வி ஜெய்ஸ்வால், டாம் கோஹ்லர், சஞ்சு சாம்சன், ரியான் பிராக், துருவ் ஜூரல், ரோவ்மன் பவல், ரவிச்சந்திர அஸ்வின், டிரண்ட் பவுல்ட், ஆவேஸ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

Mohamed:

This website uses cookies.