12 பந்துகளில் 37 ரன்கள்… முதல் இரண்டு ஓவரிலேயே சென்னை அணியின் நம்பிக்கையை உடைத்த அபிசேக்; சென்னையை ஈசியாக வீழ்த்தியது ஹைதராபாத் அணி !!

12 பந்துகளில் 37 ரன்கள்… முதல் இரண்டு ஓவரிலேயே சென்னை அணியின் நம்பிக்கையை உடைத்த அபிசேக்; சென்னையை ஈசியாக வீழ்த்தியது ஹைதராபாத் அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

17வது ஐபிஎல் டி.20 தொடரின் 18வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக சிவம் துபே 45 ரன்களும், ரஹானே 35 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான அபிசேக் சர்மா 12 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஹைதராபாத் அணியின் வெற்றியையும் முதல் இரண்டு ஓவரில் உறுதி செய்தார். மற்றொரு துவக்க வீரரான டர்வீஸ் ஹெட் 31 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

மூன்றாவது விக்கெட்டிற்கு களத்திற்கு வந்த மார்கரம் 50 ரன்களும், சபாஷ் அஹமத் 18 ரன்களும், நிதிஷ் ரெட்டி 14 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 18.1 ஓவரிலேயே இலக்கை மிக இலகுவாக எட்டிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பந்துவீச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்சமாக மொய்ன் அலி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தீபக் சாஹர் மற்றும் தீக்‌ஷன்னா ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

Mohamed:

This website uses cookies.