கடைசி போட்டி… லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தார் ஹர்திக் பாண்டியா !!

கடைசி போட்டி… லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தார் ஹர்திக் பாண்டியா

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 67வது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

தொடர் தோல்விகளால் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்து முதல் அணியாக வெளியேறிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்றைய போட்டி நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி போட்டியாகும். சொந்த மண்ணில் நடைபெறும் கடைசி போட்டியில் வெற்றி பெற்று, வெற்றியுடன் தொடரை நிறைவு செய்ய மும்பை இந்தியன்ஸ் அணி முயற்சிக்கும் என அந்த அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.

மும்பை  இந்தியன்ஸ் அணியின் ஆடும் லெவன்;

இஷான் கிஷன், நமன் திர், சூர்யகுமார் யாதவ், பெர்வீஸ், ஹர்திக் பாண்டியா, நெஹல் வதோரா, ரொமாரியோ செப்பர்ட், அன்சுல் கம்போஜ், பியூஸ் சாவ்லா, அர்ஜுன் டெண்டுல்கர், நுவன் துசாரா.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆடும் லெவன்;

கே.எல் ராகுல், தேவ்தத் படிக்கல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரண், ஆயுஸ் பதோனி, க்ரூணல் பாண்டியா, அர்சத் கான், மேட் ஹென்ரி, ரவி பிஸ்னோய், மொஹ்சின் கான்.

Mohamed:

This website uses cookies.