இறுதி போட்டிக்கு செல்ல போது யார்…? டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ்
இரண்டாவது குவாலிபயர் போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
17வது ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபயர் போட்டியில் கொல்கத்தாவிடம் தோல்வியை சந்தித்த ஹைதராபாத் அணி மற்றும் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையேயான இரண்டாவது குவாலிபயர் போட்டி இன்று நடைபெறுகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
கடந்த போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இன்றைய போட்டிக்கான தனது ஆடும் லெவனில் இரண்டு முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. ஜெயதேவ் உனாத்கட் மற்றும் மார்கரம் ஆகியோர் மீண்டும் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதே வேளையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது ஆடும் லெவனில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆடும் லெவன்;
ட்ராவிஸ் ஹெட், அபிசேக் சர்மா, ராகுல் திரிபாதி, நிதிஷ் ரெட்டி, மார்கரம், ஹென்ரிச் கிளாசன், அப்துல் சமத், பாட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், ஜெயதேவ் உனாத்கட், நடராஜன்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆடும் லெவன்;