ஐ.பி.எல்-2018 : ஏப்ரல்-7ல் மும்பையில் கோலாகலத்துவக்கம்!!

Over 1000 players sign up for VIVO IPL Player Auction 2018 · VIVO IPL 2018 Player Retention announced · IPL player policies declared for 2018 season · Vivo bags IPL title sponsorship rights for 5 years

பிசிசிஐ-யால் நடத்தப்படும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் 10 ஆண்டுகளை சிறப்பாக முடித்துள்ளது. 11-வது சீசன் இந்த வருடத்தில் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் பல்வேறு கோரிக்கைகள் வைத்திருந்தனர்.
Hyderabad : Mumbai Indians players and Owner Neeta Ambani with IPL 10 trophy after they win the IPL 10 Final match against Rising Pune Supergiants in Hyderabad on Sunday. PTI Photo by Shailendra Bhojak(PTI5_22_2017_000013B)

அதில் வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் விதிமுறை மாற்றம் முக்கியமானதாகும். வருகிற 27-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை வீரர்களின் மெகா ஏலம் நடக்கிறது. இதில் 578 வீரர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு இன்று கூடியது. இதில் ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை சுமார் 62 நாட்கள் போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல் போட்டியையும், இறுதிப் போட்டியையும் மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் 2-வது ஆட்டம் அல்லது இரவு ஆட்டம் இதுவரை இரவு 8 மணிக்கு தொடங்கியது. போட்டி முடிவதற்கு நள்ளிரவு ஆகும் என்பதால் ரசிகர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு 8 மணிக்கு தொடங்கும் போட்டியை 7 தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மாலை 4 மணிக்கு தொடங்கும் போட்டியை 5.30 மணிக்கு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நேரடி ஒளிப்பரப்பு உரிமம் பெற்றுள்ள நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது.

Hardik Pandya of the Mumbai Indians plays a shot during match 51 of the Vivo 2017 Indian Premier League between the Mumbai Indians and the Kings XI Punjab held at the Wankhede Stadium in Mumbai, India on the 11th May 2017
Photo by Vipin Pawar – Sportzpics – IPL

Editor:

This website uses cookies.