இந்த இருவரது பந்துவீச்சை கண்டு நான் பயப்படுகிறேன்! இஷன் கிஷன் விளக்கம்!

மும்பை அணிக்காக விளையாடி வரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிஷன் கிஷன் தற்போது சமூக வலைதளங்களில் மிக அதிக அளவில் காணப்படும் வருகிறார். ரசிகர்கள் கேட்கப்படும் கேள்விக்கு தன்னுடைய பதில்களை அளித்து வரும் இவர், சமீபத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு கூட தன்னுடைய பதில்களை அளித்திருக்கிறார்.

மும்மை அணியில் வளையப்பயிற்சி வேளைகளில் தன் சந்திக்க பயப்படும் இரண்டு பந்துவீச்சாளர்கள் யார் என்று கேட்ட கேள்விக்கு, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் குருனால் பாண்டியா என்று பதிலளித்துள்ளார்.

ஜஸ்பிரித் பும்ரா மற்றும் குருனால் பாண்டியா பந்து வீசினால் நான் பயப்படுவேன்

ஜஸ்பிரித் பும்ரா மிக வேகமாக பந்து வீசுவார். அவரது பந்துகளை அவ்வளவு எளிதில் என்னால் மேற்கொள்ள முடியாது. எப்பொழுதும் வித்தியாசமாக பந்து வீசுவார். கண்ணிமைக்கும் நேரத்தில் பந்துகள் நம் கிட்டே வரும். மறுமுனையில் பாண்டியா மிக மெதுவாக பந்து வீசுவார். அதே சமயம் அவருடைய பந்துகள் எந்த நேரத்தில் எப்படி திரும்பும் என கணிக்க முடியாது. அவரது பந்துகளை நான் ஏறக்குறைய இரண்டு முறை என்னுடைய பேட்டை சுழற்ற வேண்டி வரும், அவ்வளவு பொறுமையாக பந்து வீசுவார் என்று கூறியுள்ளார்.

ஹர்திக் பாண்டியாவின் கண்களும் அதற்கு ஏற்ப அவருடைய இரண்டு கைகளும் மிக வேகமாக செயல்படும்

மேலும் பேசிய அவர் ஹர்திக் பாண்டியா மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறியுள்ளார். பந்தை அவர் எப்பொழுதும் கூர்ந்து கவனிப்பார், கூர்ந்து கவனித்து அதற்கு ஏற்ப தனது கைகளை பயன்படுத்தி தனது கனமான பேட்டை கொண்டு பந்துகளை தூக்கி அடிப்பார். அதன் காரணமாகவே அவர் அடிக்கும் ஏராளமான பந்துகள் மிக உயரத்திற்கு செல்லும். அவருடைய பேட் நினைத்ததை விட மிகக் கனமாக இருக்கும் இன்று இஷான் கிஷன் கூறியுள்ளார்.

இஷான் கிஷன் இந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 73 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அதன் காரணமாக கடைசி இரண்டு போட்டிகளில் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடக்க இருக்கின்ற மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் தன்னுடைய சிறந்த பங்களிப்பை தர காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இஷான் கிஷன் ஸ்ரீலங்கா அணிக்கு எதிராக நடக்க இருக்கின்ற ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கு பெறுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.

Prabhu Soundar:

This website uses cookies.