இந்தியாவின் ஏ பிரிவு அணியை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் மாடல் அழகி ஒருவரை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா கிரிக்கெட் அணியின் ஏ பிரிவு அணியை சேர்ந்தவர் இஷான் கிஷான். ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இவர் விளையாடினார். இவர் நேற்று தனது 21வது பிறந்தநாளை தனது அணியினருடன் கொண்டாடினார்.
இஷான் கிஷானுக்கும் மாடல் அழகி அதிதி ஹுண்டியாவுக்கும் காதல் என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இன்ஸ்டாக்ராமில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மும்பை இந்தியன்ஸுக்கும், சென்னை சூப்பர் கிங்ஸுக்கும் நடந்த இறுதி போட்டியை காண அதிதி வந்திருந்தார்.
ஆனாலும் அந்த புகைப்படங்கள் அவர்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாக்ராம் அக்கவுண்டிலிருந்து பகிரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘தோனி விவகாரத்தில் நடைமுறைக்கு சரியான முடிவை எடுக்க வேண்டும். ரிஷாப், சாம்சன் உள்ளிட்ட இளம் வீரர்களை கீப்பராக களமிறக்கலாம்,’’ என, இந்திய முன்னாள் வீரர் காம்பிர் தெரிவித்தார்.
இது குறித்து முன்னாள் வீரர் காம்பிர் கூறியது: கேப்டனாக தோனி இருந்தபோது, இந்திய அணியின் எதிர்காலத்தை எண்ணி முடிவு எடுத்தார். ஆஸ்திரேலிய தொடரின்போது, மிகப்பெரிய மைதானங்களில் நான், சேவக், சச்சின் ஆகியோரால் விளையாட முடியாது என கூறினார்.
இதனால், தற்போது உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் நடைமுறைக்கு எது சரியோ அந்த முடிவை எடுக்க வேண்டும். ரிஷாப் பன்ட், சாம்சன், இஷான் கிஷான் உள்ளிட்ட வீரர்களில் திறமையானவர்களை அணியின் விக்கெட் கீப்பராக நியமிப்பது அவசியம். இளம் வீரருக்கு முதலில், ஒன்றரை ஆண்டுகள் வாய்ப்பு தர வேண்டும். இதில் ஜொலிக்கவில்லை என்றால், மற்றொரு நபரை தேர்வு செய்யலாம். எப்படியும், அடுத்த உலக கோப்பைக்கு முன் கீப்பர் ‘செட்’ ஆகிவிட வேண்டும்.