14 வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி சாதனை செய்ய அரிய வாய்ப்பு!

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்தவுடன் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகளில் விளையாட இருக்கின்றன.

சமீபத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் நிச்சயமாக இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-2 என்ற கணக்கில் வெற்றி பெறும் என்று கூறியிருந்தார். தற்பொழுது இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ராவும் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறியிருக்கிறார்.

இந்திய அணி சரியாக செயல்பட்டால் நிச்சயமாக 14 வருடங்கள் கழித்து வெற்றி பெறும் முதல் தொடராக இருக்கும்

இது பற்றி பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, ராகுல் டிராவிட் தலைமையில் கடந்த 2007ஆம் ஆண்டு தான் கடைசியாக இங்கிலாந்து நாட்டில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.

தற்பொழுது ராகுல் டிராவிட் கணித்தது நிச்சயமாக நடக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று நான் நம்புகிறேன், அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் என்ன நடக்கப்போகிறது என்று முன்கூட்டியே தெரியும். எனவே அவர் கூறியது நிச்சயமாக நடக்க அதிக வாய்ப்பு உள்ளதாக எனக்கும் மனதில் தோன்றுகிறது என்று கூறியுள்ளார். இந்திய அணி மிக சரியாக செயல்பட்டு விளையாடினால் நிச்சயமாக 14 வருடங்கள் கழித்து விராட் கோலி தலைமையில் இங்கிலாந்து நாட்டில் இங்கிலாந்து அணியை இந்திய அணி வேண்டும் டெஸ்ட் போட்டித் தொடராக அமையும் என்று கூறியுள்ளார்.

நிச்சயமாக இந்திய வீரர்களின் பேட்டிங் துணை அதிக அளவில் இருக்க வேண்டும்

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் உள்ள மைதானங்களில் நிச்சயமாக வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு அதிக அளவில் செயல்படும். தற்பொழுது நம் இந்திய அணியில் மிக சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் மிக சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கையில் நிச்சயமாக பந்து வீச்சைப் பொறுத்தவரையில் எந்த வித பலவீனம் இந்திய அணியிடம் கிடையாது.

இந்திய அணி நிச்சயமாக பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். முக்கிய வீரர்களான ரோகித் சர்மா புஜாரா விராட் கோலி மற்றும் ரஹானே ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாட வேண்டும். அவர்களது ஆரம்ப ஸ்கோர் தான் இந்திய அணியை வெற்றிபெறச் செய்யும். எனவே பேட்டிங்கில் இந்திய அணி அதிக அளவில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். மேற்கூறியது அனைத்தும் சரியாக நடந்தால் நிச்சயமாக இந்திய அணி 4-1 என்கிற கணக்கில் இங்கிலாந்து அணியை தோற்கடிக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

Prabhu Soundar:

This website uses cookies.