இதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது…விராட் கோலியின் பெருந்தன்மையில் நெகிழ்ந்து போன சூர்யகுமார் யாதவ் !!

ஹாங்காங் அணிக்கு எதிரான ஆசியக் கோப்பையின் இரண்டாவது போட்டியில் விராட் கோலி எனக்கு தலை வணங்கியது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று வருடங்களாக ஐபிஎல் தொடரின் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு அறிமுகமாகி தன்னுடைய முதல் போட்டியிலேயே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் அடுத்த அடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி லிமிடெட் ஓவர் போட்டிகளின் இந்திய அணியின் ரெகுலர் வீரராக வலம் வருகிறார்.

நடப்பு ஆண்டிலேயே இரண்டு முறை காயம் காரணமாக உள்ளூர் தொடர்களிலிருந்து நீக்கப்பட்ட சூரியகுமார் யாதவ், ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர் ஆகிய இரண்டு முக்கிய தொடர்களிலும் விளையாடுவதே கடினம் என்று பேசிவந்த நிலையில், அதிரடி ரீ-என்றி கொடுத்து இந்திய அணியின் அசைக்க முடியாத வீரராக உருவெடுத்துள்ளார்.

 

எந்த இடத்தில் களமிறக்கினாலும் சிறப்பாக விளையாடும் திறமை படைத்த சூரியகுமார் யாதவ் மைதானங்களில் பல்வேறு திசைகளிலும் ரன்கள் குவிக்கக் கூடியதில் வல்லவராகவும் திகழ்கிறார்.

இந்த நிலையில் ஹாங்காங் அணிக்கு எதிரான ஆசியக் கோப்பையில் இரண்டாவது போட்டியில் இந்தியாவின் பேட்ஸ்மேன்கள் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் சூரியகுமார் யாதவ் தான் எதிர்கொண்ட முதல் பந்தில் இருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.

 

இவருடைய ஆட்டத்தை பார்த்து அசந்து போன இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிங் கோலி இன்னிங்ஸ் முடிவில் பெவிலியன் செல்லாமல் சூரியகுமாரை தலை வணங்கி பாராட்டை தெரிவித்தார்.

இந்த நிலையில் விராட் கோலி போன்ற ஜாம்பவான் தனக்கு இப்படி பாராட்டை தெரிவித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று சூரியகுமார் யாதவ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து சூரியகுமார் யாதவ் தெரிவித்ததாவது, “விராட் கோலியின் அந்த செயல் என் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, ஏன் அவர் போகாமல் எனக்காக காத்திருந்து இப்படி செய்தார் என்பது குறித்து அவரிடம் நான் கேட்டேன், பின் அதை உணர்ந்து இருவரும் ஒன்றாக செல்வோம் என்று நானே கூறினேன், விராட் கோலியுடன் பேட்டிங் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். நான் அவர் விளையாடிய அளவிற்கு டி20 போட்டிகள் விளையாடியது கிடையாது, மேலும் அவருடன் சேர்ந்து விளையாடிய அனுபவம் மிகவும் அருமையாக இருந்தது” என்று சூரியகுமார் யாதவ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.