இவனுங்க கோப்பை ஜெயிப்பது கஷ்டம் தான்… இந்திய அணியை பயப்படவைக்க ஒரு போட்டி போதும்! – ரிக்கி பாண்டிங் பேச்சு!

“இந்திய அணியையும் அவர்களது வீரர்களையும் பதறவைக்க ஒரு போட்டி போதும்.” என்று தனது சமீபத்திய பேட்டியில் எச்சரிக்கும்படி அறிவுரை கூறியுள்ளார் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்.

நடைபெற்று வரும் உலக கோப்பையில் இந்திய அணி இதுவரை தோல்விகளே சந்திக்காத அணிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வேண்டி புள்ளி பட்டியலிலும் முதல் இடத்தில் இருக்கிறது.

அடுத்ததாக வங்கதேசம் அணிக்கு எதிராகவும், அதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளது.

இன்னும் ஓரிரு போட்டிகளில் வென்றால் இந்திய அணி அரையிறுதிக்கு செல்வது உறுதியாக விடும் என பலரும் கணித்துவரும் நிலையில் இந்திய அணிக்கு எச்சரிக்கை கொடுக்கும்படி சில கருத்துக்களை தெரிவித்திருக்கிறார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்.

“இந்திய அணி இந்த தொடரில் மிகச்சிறந்த அணிகளில் ஒன்றாக இருப்பதில் சந்தேகம் இல்லை. மூன்று போட்டிகளில் வென்றிருக்கிறார்கள், அதற்காக அவர்கள் எந்த வித அழுத்தத்திலும் இல்லை என்று கிடையாது அவர்களும் அதே அழுத்தம் நிறைந்தவர்களாகவே தெரிகின்றனர்.

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சொதப்பும் பட்சத்தில் இந்திய அணி பதட்டமடைந்து மேலும் தோல்விகளை சந்திக்கவும் அனேக வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் உரிய நேரத்தில் அவர்களது சிறந்த வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முக்கிய பங்காற்றுகின்றனர். இதுதான் இந்திய அணியை முன்னிலையில் வைத்திருக்கிறது. பந்துவீச்சில் இந்திய பவுளர்கள் உரிய நேரத்தில் தங்களது சிறப்பான நோக்கத்தை வெளிப்படுத்தி வருவது கூடுதல் சிறப்பம்சமாக இருக்கிறது.

உலககோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இந்திய அணி இருக்கிறது. ஆனால் அவர்களிடம் எந்தவித குறைகளும் இல்லை என்று அர்த்தம் கிடையாது. அதை மற்ற அணிகளும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.” என ரிக்கி பாண்டிங் பேசினார்.

Mohamed:

This website uses cookies.