இந்தியா இங்கிலாந்து போட்டியை கண்டுகளிக்கும் ஜக்கி வாசுதேவ்!!

கோவையில் உள்ள ஈஷா யோகா அறக்கட்டளையை நிறுவனரான சத்குரு எனப்படும் ஜக்கி வாசுதேவ் இந்தியா-இங்கிலாந்து  அணிகள் மோதி வரும் போட்டியை மைதானத்திலிருந்து கண்டுகளிக்கிறார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பையின் 38 வது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்தியா இரு அணிகளும் மோதுகின்றன. இதில் முதன் முறையாக இந்திய அணி காவி நிற உடையில் களமிறங்கியுள்ளது.

இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிருதிக்குள் நுழையும் வாய்ப்பை பெரும். அதே நேரம் இங்கிலாந்து அணிக்கும் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடம் பிடிக்க இப்போட்டி மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். இரு அணிகளுக்கும் இது மிக முக்கியமான போட்டி என்பதால் ஆட்டத்தில் பரபரப்பிற்கு சற்றும் குறைவிருக்காது.

இப் போட்டியை காண இங்கிலாந்து அடைக்க சொந்த மைதானமாக இருந்தாலும் இந்திய ரசிகர்கள் பெருமளவில் காணப்படுகின்றனர்.

தமிழகத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதியோகி மற்றும் ஈஷா யோகா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு என அனைவராலும் அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ் இப்போட்டியை காண இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் மைதானத்திற்கு சென்று உள்ளார். மைதானத்தில் கண்டு ரசிகர்களுடன் படத்தை எடுத்துக் கொண்டு அவரை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் ஓய்வு பெற்றிருந்த துவக்க வீரர்கள் ஜசன் ராய் இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளார். மறு பக்கம் ஜானி  பைர்ஸ்டாவ் துவங்குகிறார்.

இங்கிலாந்து அணி முதல் 10 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்து விக்கெட் இழப்பின்றி ஆடி வருகிறது.

Mohamed:

This website uses cookies.