ஜம்மு காஷ்மீரின் முதல் தர அணி ஆல் ரவுண்டர் சமியுள்ளா பெய்க் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் அணிக்காக கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
தற்போது இந்தியாவின் 2017-18க்கான ரஞ்சி கோப்பையின் முதல் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 36 வயதான சமியுள்ளா னவமபர் 17ஆம் தேதியுடன் தனது கடைசி ரஞ்சி போட்டியில் அனைத்து விதமான கிரிகெட் போட்டிகளில் இருந்து ஓவ்ய் பெருகிறார். இந்த போட்டி ஹரியானா அணிக்கு எதிராக லாலியில் நடைபெறுகிறது. இதனைப் பற்றி சமியூள்ளா கூறியதாவது,
கடந்த வருடத்தில் இருந்தே ஓய்வு பற்றி யோசித்து வருகிறேன். என்னுடைய சரியான பாதை அமைந்த பின் ஓய்வு அறிவிக்க முடிவு செய்துள்ளேன். இன்னும் சில வருடங்கள் ஆடி விட முயற்சி செய்தேன். பின்னர் இன்னும் சிலபோட்டிகள் ஆடிவிட்டு ஓய்வு அறிவிக்க முடிவு செயதேன். விரைவில் ஓய்வு பெறும் பட்சத்தில் அணியில் என்னுடைய இடம் வேறு ஒரு இளம் வீரர்ருக்கு கிடைக்கும் அதன் காரணமாக வெகு வேகமாக ஓய்வு பெற மமுடிவு செய்துள்ளேன்.
எனக் கூறினார் சமியுள்ளா.
சமியுள்ளா, கடந்த 2003ஆம் வருடம் ஜம்மு காஷ்மிர் அணிக்காக பிகார் அணியை எதிர்த்து களம் இறங்கினார். ஜம்மு காஷ்மிரில் சற்று புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் சமியுள்ளா. தற்போது இன்னும் 3 முதல் தரப் போட்டிகள் அவருக்கு உள்ளது. தற்போது வரை 158 விக்கெட்டுகள் முதல் தரப் போட்டிகளில் எடுத்துள்ளார்.
ஓய்விற்குப் பிறகு ஜம்மு தலைநக்ர ஶ்ரீநகரில் ஒரு கிரிக்கெட் அகாடமியை துவக்கப் போவதாகவும், இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து உலக்கத்தாரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்கவுள்ளதாக்வும் கூறினார் சமியுள்ளா. ஜம்மு காஷ்மிரில் ஏறகனவே ஒரு கிரிக்கெட் அகாடமி இருந்தாலும், அதில் சரியான வசதிகள் இல்லை எனவேதான் ஒரு கிரிக்கெட் அகாடமியை உருவாக்கப் போவதாக தெரிவித்துள்ளார் சமியுள்ளாப் பெய்க்.