கடந்த ஞாயிறன்று பெர்த் மைதானத்தின் ஓய்வறைச் சுவரைக் கையால் குத்தி காயம் பட்டுக் கொண்ட மிட்செல் மார்ஷ் 6 வாரங்களுக்கு கிரிக்கெட் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் மிட்செல் மார்ஷ் ஆட மாட்டார்.
இந்தச் சம்பவத்துக்கு மிட்செல் மார்ஷ் தற்போது வருத்தம் தெரிவித்துக் கூறுகையில், “நான் அடிப்படையில் ஒரு முட்டாள் என்று பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் என்னிடம் கூறினார். அவர் என் மீதான கடும் ஏமாற்றத்தில் இதைக் கூறினார். இது தனிப்பட்ட சம்பவம் இனி இப்படி ஒரு போதும் நடக்காது.
சுவரைப்போய் குத்து விடுவது என்பது என் குணாதிசியத்தில் இல்லாத ஒன்று. அது நல்ல நடத்தையுமன்று, நான் எதையுமே சுலபமாக எடுத்துக் கொள்பவன், அடுத்த 6 வாரங்களுக்கு அணியின் பயணத்தில் நான் பங்கு பெறாததை நினைத்து நான் கடுமையாக ஏமாற்றமடைந்தேன். அணியின் சகவீரர்களையும் கைவிட்டு விட்டேன். நான் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன், நிச்சயமாக இது போன்ற தவறான உதாரணமாக நான் ஆகவிரும்பவில்லை.
ஆனாலும் அவர்கள் என் பக்கமே உள்ளனர், என்னை நேசிக்கின்றனர் என்றார் மிட்செல் மார்ஷ்.
மேற்கு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ், சமீபத்தில் ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியில் டாஸ்மேனியா அணிக்கு எதிராக 53 ரன்களில் ஆட்டமிழந்ததையடுத்து கோபத்தில் மைதான ஓய்வறைச் சுவற்றை கையால் ஓங்கிக் குத்தி காயமடைந்தார என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்,
மார்ஷ் தனது நடத்தைக்காக தனது அணியினரிடம் மன்னிப்பு கேட்டார்.
“உங்கள் அணியினரை வீழ்த்தி, அடுத்த நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு பயணத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியாமல் போனது போன்ற உணர்வுதான், இதுதான் வீரர்களிடம் நான் வலியுறுத்த விரும்பினேன், நான் மிகவும் வருந்துகிறேன். நான் அமைக்க நினைத்த உதாரணம் இது அல்ல.
“அவர்கள் என்னைச் சுற்றி உள்ளார்கள், அவர்கள் இன்னும் என்னை நேசிக்கிறார்கள், எனவே இது எல்லாம் நல்லதுக்கு தான்.”
2019 செப்டம்பரில் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் 2019 ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்டில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு திரும்பியதில் மார்ஷ் ஈர்க்கப்பட்டார்.