பல்கலைகழகத்தில் மாபெரும் பதவி வகிக்கப்போகும் கபில் தேவ்! இந்திய கிரிக்கெட்டை வேற லெவல் கொண்டு செல்ல ஏற்ப்பாடு!

அரியானாவில் தொடங்கப்பட உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே விளையாட்டுக்கு என தனி பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அரியானா மாநிலத்தில் இளைஞர்களிடையே விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டுத் துறைக்கென தனி பல்கலைகழகம் நிறுவுவதற்கான அனுமதியை கடந்த ஜூலை மாதம் அம்மாநில அரசு வழங்கியது.

1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனாக கபில் தேவ் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அனில் விஜ் ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில், ‘‘ஹரியானா விளையாட்டு பல்கலை.,யின் முதல் வேந்தராக கபில் தேவ் நியமிக்கப்படுகிறார்,’’ என, தெரிவித்திருந்தார்.

முன்னதாக,
புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் முன்னாள் வீரர் அன்ஷூமான் கெய்க்வாட், முன்னாள் வீராங்கனை சாந்தா ரங்கசாமி ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி உருவாக்கப்பட்டது.

விண்ணப்பம் அனுப்பியவர்களில் ரவிசாஸ்திரி, ராபின்சிங், லால்சந்த் ராஜ்புத் (மூன்று பேரும் இந்தியர்), டாம் மூடி (ஆஸ்திரேலியா), மைக் ஹெசன் (நியூசிலாந்து), பில் சிமோன்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோர் கொண்ட பட்டியல் இறுதிசெய்யப்பட்டது. இதில் சிமோன்ஸ் கடைசி நேரத்தில் விலகினார்.
“Number three was Tom Moody, number two was Mike Hesson. Number one is Ravi Shastri as all of you were expecting… (But) It was a very close race,” said Kapil Dev at the press conference to announce the decision.
இந்த நிலையில் இவர்களிடம் கபில்தேவ் தலைமையிலான கமிட்டி மும்பையில் உள்ள கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில் நேர்காணல் நடத்தியது. நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராகவும், ஐ.பி.எல். பயிற்சியாளராகவும் பணியாற்றி இருக்கும் மைக் ஹெசன், ராபின்சிங், லால்சந்த் ராஜ்புத் ஆகியோர் நேரில் ஆஜராகி இந்திய அணியை எதிர்காலத்தில் எப்படி முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வேன், அதற்கு தங்களிடம் உள்ள திட்டங்கள் என்ன என்பதை தேர்வு கமிட்டியிடம் சமர்ப்பித்தனர்.

தற்போது வெஸ்ட் இண்டீசில் இருக்கும் ரவிசாஸ்திரி மற்றும் ஆஸ்திரேலியாவின் டாம் மூடி ஆகியோரிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேர்காணல் நடத்தப்பட்டது. பயிற்சியாளர் அனுபவம், பயிற்சி தத்துவம், பயிற்சியாளராக சாதனைகள், தகவல் தொடர்பு, நவீன கால பயிற்சி முறைகள் என்று 5 வகையாக பிரித்து தேர்வு குழுவினர் தனித்தனியாக மதிப்பெண் வழங்கினர்.

இதன் முடிவில் கேப்டன் விராட் கோலியின் ஆதரவு பெற்ற, வீரர்களுடன் நல்ல புரிந்துணர்வு கொண்டுள்ள ரவிசாஸ்திரியை மீண்டும் பயிற்சியாளராக நியமிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

Sathish Kumar:

This website uses cookies.