பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் புதிய சாம்பியன்! தொடர் நாயகன் விருது வென்ற பாபர் அசாம்!

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் புதிய சாம்பியன்! தொடர் நாயகன் விருது வென்ற பாபர் அசாம்!

ஐபிஎல் தொடரை போன்று பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வருவது. கொரோனா வைரஸ் காலத்திற்கு முன்னர் இந்த தொடர் துவங்கியது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடந்து கொண்டிருந்தது. அப்போது கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இந்த தொடரின் பாதியில் வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் வெளியேறினர்

இதன் காரணமாக உடனடியாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் ஐபிஎல் தொடர் நடத்தி முடிக்கப்பட்ட அதனை மையமாக வைத்து பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் மீதமிருக்கும் போட்டிகளை நடத்தி விடலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருந்தது. இதனையொட்டி கடந்த ஒரு வாரமாக மீதமிருக்கும் போட்டியில் நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு கரசி கிங்ஸ் மற்றும் லாகூர் ஆகிய அணிகள் முன்னேறின இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற லாஹூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது

முதலில் ஆடிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது அது அணியின் துவக்க வீரர்கள்  தமிம் இக்பால் 35 ரன்களும் ஃபக்கர் ஜமான் 27 ரன்கள் அடிக்க தட்டுத்தடுமாறி 134 ரன்கள் மட்டுமே எடுத்தது இதனையடுத்து எளிதான இலக்கை நோக்கி ஆடிய கராயணின் மிக எளிதாக வெற்றி பெற்றது

அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் 49 பந்துகளில் 63 ரன்கள் எடுக்க 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு வெற்றி பெற்றது இந்த தொடரில் 12 போட்டிகளில் 473 ரன்கள் அடித்த பாபர் அசாம் தொடர் நாயகன் விருது வென்றார்

Prabhu Soundar:

This website uses cookies.