கே.எல் ராகுலை வித்யாசமாக கலாய்த்த சிகர் தவான்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 5-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்ததாக நடைபெற்ற ஒரு நாள் தொடரில் நியூசிலாந்து அணியினர் இந்திய அணியை 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தனர். இந்த தொடரில் அனுபவ வீரர்கள் இல்லாதது, நட்சத்திர வீரர்கள் பெரிதாக விளையாடாதது போன்றவை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் நியூசிலாந்து தொடரில் கே.எல்.ராகுலின் ஆட்டம் சிறப்பாக இருந்தது என்று இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் பாராட்டியுள்ளார். இந்தத் தொடரில் ராகுல் மூன்று ஒருநாள் போட்டிகளையும் சேர்த்து 204 ரன்கள் எடுத்திருந்தார். இதை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஷிகர் தவான் “சிறப்பாக விளையாடினீர்கள். அற்புதமான சதம் சகோ. உறுதியுடன் முன்னேறுங்கள். இந்த வகையில் பேட்டிங் செய்தால் நீங்கள் 12வதாக இறங்கினால் கூட சதம் அடித்து விடுவீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வரும் கே.எல்.ராகுலை, ஷிகர் தவானிற்கு மாற்று வீரராக கொண்டுவருவார்களா ? என்ற கேள்விகள் எழும்பும் நிலையில், தவான் ராகுலை பாராட்டியிருப்பது அவரது பெருந்தன்மையை காட்டும் வகையில் அமைந்திருப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் 112 ரன்கள் விளாசி சர்வதேச ஒரு நாள் போட்டியில் தனது 4வது சதத்தை பதிவு செய்தார்.

இந்தியாவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியது. இந்தியாவிற்கு எதிரான 3-வது மற்றும் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் 112 ரன்கள் விளாசினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் சதமடித்தன் மூலம் ராகுல் டிராவிட்டின் 21 ஆண்டுக்கால சாதனையை பகிர்ந்து கொண்டார்.

India’s Lokesh Rahul raises his bat after scoring 50 runs during the third Twenty20 international cricket match between India and West Indies in Mumbai, India, Wednesday, Dec. 11, 2019. (AP Photo/Rafiq Maqbool)

 

இந்திய விக்கெட் கீப்பர்களில் ஆசியாவில் இல்லாத ஒரு நாட்டில் சதமடித்த 2வது வீரர் கே.எல்.ராகுல் என்ற பெருமையை பெற்றுள்ளார். ராகுல் டிராவிட் ஒரு நாள் போட்டிகளில் முழுநேர விக்கெட் கீப்பராக செயல்பட்டுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற 1999 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் டிராவிட் 145 ரன்கள் எடுத்திருந்தார். இதுவே இந்திய விக்கெட் கீப்பர் ஒருவர் ஆசியா இல்லாத நாட்டில் அடித்த முதல் சதமாகும்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆசிய கண்டத்தில் இல்லாத பிற நாடுகளில் சதமடித்தது இல்லை. 21 வருடங்கள் கழித்து தற்போது கே.எல்.ராகுல் நியூசிலாந்தில் சதமடித்து ராகுல் டிராவிட் சாதனையில் இணைந்துள்ளார்.

Sathish Kumar:

This website uses cookies.