அடுத்த போட்டியில் இருந்து கட் அடித்த இந்திய அணியின் முக்கிய வீரர்! காரணம் என்ன?

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்காத போதிலும் கேஎல் ராகுல், ரஞ்சி டிராபி காலிறுதியில் கர்நாடகா அணிக்காக விளையாடவில்லை.

ரஞ்சி டிராபி காலிறுதி ஆட்டத்தில் கேஎல் ராகுல் விளையாடவில்லை

 

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்காத போதிலும் கேஎல் ராகுல், ரஞ்சி டிராபி காலிறுதியில் கர்நாடகா அணிக்காக விளையாடவில்லை.

இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் கேஎல் ராகுல். இவருக்கு அணியில் இடம் கிடைக்காததால் விக்கெட் கீப்பருடன் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கி விளையாடி வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

PERTH, AUSTRALIA – DECEMBER 15: Lokesh Rahul of India leaves the field after being dismissed by Josh Hazlewood of Australia during day two of the second match in the Test series between Australia and India at Perth Stadium on December 15, 2018 in Perth, Australia. (Photo by Cameron Spencer/Getty Images)

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்காததால் அவர் இந்தியா திரும்பியுள்ளார். கேஎல் ராகுல் சர்வதேச போட்டி இல்லாத நேரத்தில் கர்நாடகா அணிக்காக விளையாடுவது வழக்கம். ரஞ்சி டிராபியில் கர்நாடகா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

20-ந்தேதி நடைபெறும் இந்த ஆட்டத்தில் கர்நாடகா ஜம்மு-காஷ்மீர் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் கேஎல் ராகுல் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதனால் ரஞ்சி டிராபியில் கேஎல் ராகுல் விளையாடவில்லை. அதேசமயத்தில் மணிஷ் பாண்டே கர்நாடகா அணிக்காக விளையாடுகிறார்.

Sathish Kumar:

This website uses cookies.