இவங்க ரெண்டு பேரும் இல்லனா கோலி ஒரு டம்பி பீசுதான்: கம்பிர் பேச்சு

தோனி மற்றும் ரோஹித் இருப்பதால்தான் விராட் கோலி சிறந்த கேப்டனாக இருக்கிறார் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்

அகமதாபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பல்கலைக்கழக மாணவர்களிடம் பேசும்போது கம்பீர் இதனைத் தெரிவித்தார்.

இதுகுறித்து கம்பீர் பேசியதாவது:

“கேப்டனாக கோலி இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டிய காலம் உள்ளது. கோலி இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பையில் கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்டார். ஆனால் இன்னும் அவர் தன்னை சிறந்த கேப்டனாக நிரூபிக்க தூரம் இருக்கிறது.

MANCHESTER, ENGLAND – JUNE 16: India captain Virat Kohli high fives team mate Rohit Sharma as Sharma takes a single to reach his century during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between Pakistan and India at Old Trafford on June 16, 2019 in Manchester, England. (Photo by Visionhaus/Getty Images)

கோலி தற்போது ஒரு நாள் தொடர்களில் சிறந்த கேப்டனாக இருக்கிறார் என்றால் அவர் அணியில் ரோஹித் சர்மாவைப் பெற்றிருக்கிறார். மேலும் நீண்ட காலமாக அவருடன் தோனி இருந்திருக்கிறார்.

உங்களுக்கு ஒத்துழைக்காத வீரர்கள் அணியில் இருக்கும்போதுதான் உங்கள் தலைமைப் பண்பு கவனிக்கப்படும். நான் கேப்டன்சி குறித்து எப்போது பேசினாலும் நேர்மையாகவே பேசி இருக்கிறேன். ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக என்ன சாதித்திருக்கிறார் என்று பாருங்கள். தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக என்ன சாதித்து இருக்கிறார் என்று பாருங்கள். இதனையும் ஆர்சிபி அணியையும் ஒப்பிட்டால் இதன் முடிவுகளை அனைவரும் பார்க்க வேண்டும்’’.

இவ்வாறு கவுதம் கம்பீர் தெரிவித்தார்.

ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த கம்பீர் அந்த அணிக்கு இருமுறை கோப்பையைப் பெற்றுத் தந்துள்ளார்.

ஐபிஎல் கோப்பையைக் கூட கோலி வெல்லவில்லை என்றாலும் ஆர்சிபி அவரை கேப்டன்சியிலிருந்து தூக்காமல் வைத்திருப்பதற்கு அவர் நன்றிக்கடன் பட்டிருக்கிறார் என்று கம்பீர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெற்றபோது கிண்டலாகத் தெரிவித்திருந்தார்.

மேலும் ஒரு தொடரில் இவ்வளவு ஆண்டுகள் ஒரு அணியின் கேப்டனாக இருந்துகொண்டு கோப்பையை வெல்லாமல் இருக்கும் கேப்டன்கள் அரிதே என்று கோலியை கம்பீர் விமர்சித்திருந்தார்.

இந்திய அணியை கோலி சிறப்பாக வழி நடத்தினாலும் இதுவரை ஆர்சிபி அணியை 96 போட்டிகளில் வழிநடத்திய கோலி 44 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sathish Kumar:

This website uses cookies.