மகளிர் உலக கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி இங்கிலாந்து அணியிடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இதனை தொடர்ந்து ஹிந்தி நடிகரான கமால் ராஷித் கான் இந்திய அணியின் கேப்டன் ஆன மித்தாலி ராஜ் இறுதி போட்டியில் சூதாட்டத்தில் ஈடு பட்டுவிட்டார் என தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இறுதி போட்டியில் மித்தாலி ராஜ் தேவை இல்லாமல் ரன் அவுட் ஆனார் இதனை தொடர்ந்து கமால் ராஷித் கான் மித்தாலி ராஜ் வேணும் என்றே தான் அவுட் ஆகியுள்ளார் என கூறியிருக்கிறார்.
ஹிந்தி நடிகரான கமால் ராஷித் கான் தன் ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி இது போல் தான் பேசிக்கொண்டு இருப்பார் இதற்க்கு முன்னாள் சாம்பியன் ட்ரோபி இறுதி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது இதனால் இந்த போட்டியும் சூதாட்டம் என தன ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.
ஹிந்தி நடிகர் கமால் ராஷித் கான் கூறியது :
” மித்தாலி ராஜ் ரன் அவுட் ஆன விதத்திலேயே தெரிகிறது இந்த போட்டி ஒரு சூதாட்டம் என்று ” என தன் ட்விட்டர் பக்கத்தில் கமால் ராஷித் கான் கூறினார்.
கமால் ராஷித் கான் தன் ட்விட்டர் பக்கத்தில் செய்த ட்வீட் :
கமால் ராஷித் கான் இதற்க்கு முன்னாள் கோஹ்லி கங்குலி போன்ற இந்திய வீரர்களையும் இது போல் காமல் ராஷித் கான் தன் ட்விட்டர் பக்கத்தில் அவதூறாக பேசியுள்ளார்.