கேப்டன் அவதாரம் எடுத்தார் குல்தீப் யாதவ்; அடுத்த தொடருக்கான அணி அறிவிப்பு !!

இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ரஞ்சித் கோப்பை தொடரில் உத்தர் பிரதேஷ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்த குல்தீப் யாதவ் தோனியின் ஓய்விற்குப் பின் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டார், இவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தாதன் காரணமாக இவர் இந்திய அணியில் இருந்து முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டார்.

குறிப்பாக நடைபெற்று முடிந்த 2021 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இவரை கொல்கத்தா அணி ஒரு போட்டியில் கூட விளையாட வைக்க வில்லை.

இந்திய அணியின் வெற்றிக்காக பல முறை சிறந்த முறையில் பந்துவீசி பல சாதனைகளைப் படைத்த குல்தீப் யாதவ் மோசமான பார்மால் ஓரம்கட்டப்பட்டுள்ளது வருத்தத்திற்குரிய விஷயம் என்று பெரும்பாலான வல்லுநர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வந்தனர்.

காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட குல்தீப் யாதவ் நீண்ட நாள் இடைவெளிக்குப் பின் மீண்டும் பயிற்சிக்கு திரும்பிய நிலையில் உத்தரப்பிரதேச அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் அந்த அணியின் துணை கேப்டனாக கரண் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அந்த அணியின் புகழ் பெற்ற நட்சத்திர வீரர் புவனேஷ்வர் குமார் இடம் பெற்றுள்ளார் இதனால் உத்தரபிரதேச ரஞ்சி டிராபியில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படுகிறது. மேலும் எதிர்வரும் ரஞ்சி டிராபியில் உத்தரபிரதேச அணிக்காக 24 வீரர்களை உத்தரப் பிரதேச கிரிக்கெட் நிர்வாகம் தேர்ந்தெடுத்துள்ளது.

ஜனவரி 13ம் தேதி நடைபெற உள்ள ரஞ்சி டிராபி தொடருக்கு தனது உத்தரபிரதேச அணியின் வீரர்கள்

குல்திப் யாதவ் (c), கரன் ஷர்மா (vc), மாதவ் கௌஷிக், அல்மாஸ் சவுக்கத், சமர்த் சிங், ஹர்தீப் சிங், ரிங்கு சிங், பிரியம் கர்க், அக்ஸ்தீப் நாத், சமீர் சௌத்ரி, கிரிடக்யா சிங், ஆரியன் ஜூயல், சந்திரா ஜூரல், சிவம் மவி, அங்கித் ராஜ்புட், யாஷ் டயல், குணால் யாதவ், பிரின்ஸ் யாதவ், ரிஷப் பண்சல், ஷனு ஷைனி, ஜீசன் அன்சாரி, சிவம் சர்மா, பார்த் மிஸ்ரா.

 

Mohamed:

This website uses cookies.