அந்த பையனுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கல..? இந்திய அணி மீது முன்னாள் வீரர் கோபம் !!

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி வாய்ப்பளிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார்.

டி.20 உலகக்கோப்பை இறுதி போட்டி முடிந்த அடுத்த நாளே இந்தியா வரும் நியூசிலாந்து அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.


இதில் முதலில் நடைபெறும் டி.20 தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., இன்று அறிவித்துள்ளது.

இதில் விராட் கோலி ரோஹித் சர்மா போன்ற அனுபவ வீரர்கள் இல்லாத காரணத்தால் ரஹானே தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதில் பெரும்பாலான சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது இதனால் இளம் வீரர்களின் படை நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள காத்துக் கொண்டுள்ளது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் தேர்வாகியுள்ள வீரர்கள் குறித்து தற்பொழுது சர்ச்சையாக உள்ளது, இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்காக ஒருமுறைகூட விளையாடாத ஸ்ரேயஸ் ஐயர்க்கு இடம் கிடைத்திருப்பது மற்றும் ஹனுமா விஹாரி இடம் கிடைக்காமல் போனது குறித்த பேச்சுகள் தற்பொழுது பேசுபொருள் ஆகியுள்ளது.

அந்த வகையில் ஹனுமா விஹாரி டெஸ்ட் தொடரில் இடம் பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர் , என்னைப் பொறுத்தவரை 100 சதவீதம் இந்தியாவில் நடக்கும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹனுமா விஹாரி களமிறக்க வேண்டும், அவர் பெரிய ரன்கள் எதுவும் அடிக்காமல் இருக்கலாம் ஆனால் இந்தியாவில் நடைபெற இருக்கக்கூடிய இந்த டெஸ்ட் போட்டியில் இவர் விளையாட வேண்டியது அவருடைய உரிமை அவ்வாறு செய்தால் மட்டுமே அவருடைய கிரிக்கெட் பயணத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும், ஹனுமா விஹாரி யை இந்திய அணி கடுமையான நிலைகளில் மட்டும்தான் பயன்படுத்தி வருகிறது.

ஆனால் இந்தியாவில் நடக்கும் இந்தியர்களுக்கு சாதகமான போட்டியில் ஹனுமா விஹாரி களமிறக்காமல் இந்தியா ஏ அணியில் அவரே விளையாட வைத்துள்ளது. அது நல்லது தான் ஆனால் அதைவிட சிறந்த முடிவு என்னவென்றால் ரிஷப் பண்ட் இல்லாத இந்திய அணியில் ஹனுமா விஹாரி தேர்ந்தெடுத்து விளையாட வைப்பது தான் என்று அதில் தெரிவித்திருந்தார்

Mohamed:

This website uses cookies.