மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள செரம்போரைச் சேர்ந்தவர் தேபாப்ரதா பால். 21 வயது கிரிக்கெட் வீரரான இவர், ஆல்ரவுண்டர். இவர் கிரிக்கெட் திறமையை மேலும் வளர்த்துக்கொள்ள தெற்கு கொல்கத்தாவில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.
நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பயங்கர இடி சத்தம் கேட்டது. திடீரென்று மின்னலும் வெட்டியது. அடுத்த சில நிமிடத்தில் பால் திடீரென கீழே விழுந்து மயங்கினார். அவர் மின்னல் தாக்கியதால் விழுந்தார் என்பது தெரிய வந்தது.
அப்போது பலத்த சத்தத்துடன் மின்னல் வெட்டியது. இதில் மின்னல் தாக்கி தேபாபரதா பால், அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். உடனடியாக மற்ற விளையாட்டு வீரர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இத்தகவலை கிளப்பின் செயலாளர் அப்துல் மசூத் தெரிவித்துள்ளார். இளம் வீரர் மின்னல்தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.