மீண்டும் கேப்டனாகிறார் முன்னாள் ஜாம்பவான் ஜெயவர்தனே
கிரிக்கெட்டின் தாயகம் என வர்ணிக்கப்படும் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 29ஆம் தேதி ஆரம்பமாகவுள்ள ஐ.சி.சி இன் இணை உறுப்பு நாடுகளான நெதர்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுக்கு எதிரான T20 முத்தரப்பு தொடருக்கான மெல்பார்ன் கிரிக்கெட் கழக (MCC) அணியின் கேப்டனாக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹிலா ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியின் தலைசிறந்த வீரராக கருதப்படும் மஹேல ஜயவர்தன இலங்கை அணி சார்பாக டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளில் அதிக ரன்கள் பெற்ற வீரர்கள் வரிசையில் முதல் மூன்று இடங்களுக்குள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 2002 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கெதிராக சதம் கடந்ததன் காரணமாக கௌரவ வீரர்கள் என்ற பெயர் பலகையில் இரண்டு முறை தனது பெயரை பதிவு செய்து கௌரவப் படுத்தப்பட்டுள்ளார்.
மேலும், மஹேல ஜயவர்தன 2015 ஆம் ஆண்டு MCC இன் உறுப்பினரானார்.
உலகளாவிய ரீதியில் பல அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியுள்ள இவர் இங்கிலாந்து உள்ளூர் போட்டிகளில் சமர்செட் மற்றும் சசெக்ஸ் அணிகள் சார்பாக T20 போட்டிகளில் விளையாடிய அனுபவமுள்ளவர்.
MCC அணியில், ஸ்கொட்லாந்து அணி வீரர்களான டைலன் பட்ஜ், அலஸ்டைர் இவன்ஸ் மற்றும் மார்க் வொட் ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் அண்மையில் இங்கிலாந்து அணிக்கெதிராக தமது முதலாவது வெற்றியை பதிவு செய்த ஒரு நாள் போட்டியில் ஸ்கொட்லாந்து அணிக்காக விளையாடியிருந்தனர்.
மேலும், MCC அணி சார்பாக அபோரிஜினல் அணிக்கெதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான பட்ஜ் 52 மற்றும் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.
இடது கை சுழல்பந்து வீச்சாளர் வொட், இங்கிலாந்து அணிக்கெதிராக வெற்றி பெற்ற போட்டியில் முக்கியமான மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
அதேபோல், வலது கை வேகப்பந்து வீச்சாளர் இவன்சும் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
மேலும், இவன்ஸ் அதே வாரத்தில் இடம்பெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது T20 போட்டியில் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.