அடுத்த சையத் முஷ்டாக் அலி டி20 டிராபி சீசனுக்காக பெங்கால் அணியின் கேப்டனாக இந்திய அணியின் மனோஜ் திவாரியை நியமித்துள்ளதால், அடுத்த சீசனில் பெங்கால் அணிக்காக கேப்டனாக செயல் படுவார் மனோஜ் திவாரி.
சுதீப் சேட்டர்ஜீ பெங்கால் அணியின் துணை கேப்டனாக செயல் படுவார். அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் அசோக் டிண்டா, அனுஷ்டப் மஜூமார், கனிஷ்க் சேத், அமீர் கனி, சயன கோஷ் ஆகியோர் சில புது முகத்துடன் உள்ளார்கள்.
வ்ரிதிமான் சஹா மற்றும் முகமது ஷமி பெங்கால் அணிக்காக இந்த சீசனில் விளையாட மாட்டார்கள். தென்னாப்ரிக்காவிற்கு எதிராக விளையாடவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியில் இருவரும் இடம் பெற்றுள்ளார்கள். ஆனால், ஒருநாள் அணியில் சஹா இல்லாததால், அவர் பெங்கால் அணிக்காக விஜய் ஹசாரே டிராபியில் விளையாடுவார்.
இன்னொரு பக்கம், ஒருநாள் அணியில் முகமது ஷமி இருப்பதால், அவர் தொடர்ந்து தென்னாபிரிக்காவில் தங்குவார். ஷமி மற்றும் சஹா ஆகியோர் இருவரும் ரஞ்சி டிராபியில் பெங்கால் அணிக்காக சில போட்டிகளில் விளையாடினார்கள்.
19 வயதிற்கு உட்பட்டோர்கள் உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இஷான் போரில் தற்போது நியூஸிலாந்தில் இருக்கிறார். இதனால், அவரும் பெங்கால் அணிக்காக விளையாட மாட்டார்.