சதம் அடித்து அசத்திய டேரியல் மிட்செல்… 6 விக்கெட்டுகளை அள்ளி வரலாறு படைத்த முகமது ஷமி; 280 ரன்கள் குவித்தது நியூசிலாந்து அணி
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 273 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதி வருகின்றன.
தர்மசாலா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான டீவன் கான்வே (0) மற்றும் வில் யங் (17) ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர்.
இதன்பின் மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா – டேரியல் மிட்செல் ஜோடி பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி மூன்றாவது விக்கெட்டிற்கு 159 ரன்கள் சேர்த்தது. பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா 75 ரன்கள் எடுத்திருந்த போது, முகமது ஷமியின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை இழந்தபின்பும் பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதமும் அடித்த டேரிய மிட்செல், கடைசி ஓவர் வரை தனி ஆளாக போராடினாலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் கிளன் பிலிப்ஸை(23) தவிர மற்றவர்களில் ஒருவர் கூட ஒற்றை இலக்க ரன்னை தாண்டாமல் முகமது ஷமியின் பந்துவீச்சில் சிக்கி விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 50வது ஓவரின் கடைசி பந்தில் 273 ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதே போல் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், பும்ராஹ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.