கடைசி வரை தனி ஆளாக போராடிய தீக்‌ஷன்னா.. சொதப்பிய பேட்ஸ்மேன்கள்; 171 ரன்களில் ஆல் அவுட்டானது இலங்கை அணி !!

கடைசி வரை தனி ஆளாக போராடிய தீக்‌ஷன்னா.. சொதப்பிய பேட்ஸ்மேன்கள்; 171 ரன்களில் ஆல் அவுட்டானது இலங்கை அணி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 41வது போட்டியில் இலங்கை அணியும், நியூசிலாந்து அணியும் மோதி வருகின்றன.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணிக்கு அந்த அணியின் ஒரு துவகக் வீரரான பதும் நிஷான்கா 2 ரன்னில் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தார்.

மற்றொரு துவக்க வீரரான குஷால் பெரேரா 51 ரன்கள் எடுத்து கொடுத்ததாலும், அடுத்தடுத்து களமிறங்கிய அஸலங்கா, மேத்யூஸ் உள்ளிட்ட இலங்கை அணியின் சீனியர் வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து நடையை கட்டினர்.

கடைசி வரை விக்கெட்டை இழக்காமல் தன்னால் முடிந்தவரை போராடிய தீக்‌ஷன்னா 91 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்காமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து நடையை கட்டியதால் 46.4 ஓவரில் வெறும் 171 ரன்கள் மட்டுமே எடுத்த இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக டிரண்ட் பவுல்ட் 3 விக்கெட்டுகளையும், டிம் சவுத்தி ஒரு விக்கெட்டையும், மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இலங்கை அணிக்கு எதிரான இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்யும்.

Mohamed:

This website uses cookies.