தனது சாதனையை காலி செய்த கப்திலை பாராட்டிய மெக்கல்லம்
தனது சாதனையை காலி செய்து டி.20 அரங்கில் புதிய சாதனை படைத்துள்ள கப்திலுக்கு, முன்னாள் வீரர் பிராண்டன் மெக்கல்லம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முத்தரப்பு டி.20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் நியூசிலாந்து அணியும் மோதின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான கப்தில் 105 ரன்களும், முன்ரோ 76 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 243 ரன்கள் எடுத்தது.
இப்போட்டியில் நியூசிலாந்து வீரர் கப்டில் 49 பந்தில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் டி-20 அரங்கில் அதிவேக சதம்விளாசிய நியூசிலாந்து வீரர் என்ற பெருமை பெற்றார் கப்டில்.
இதற்கு முன் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கலம் 51 பந்தில் அதிவேகமான செஞ்சுரி அடித்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமை பெற்றிருந்தார்.
இது தவிர ஒட்டுமொத்தமாக சர்வதேச டி-20 போட்டியில் அதிகரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் கப்டில் (2188 ரன்கள்) முதலிடம் பிடித்தார்.
இதனையடுத்து கப்திலை பலரும் பாராட்டி வரும் நிலையில், மெக்கல்லமும் கப்திலுக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
கப்திலுக்கு வாழ்த்து தெரிவித்து மெக்கல்லம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்வீட்டில் “இந்த சாதனைக்கு கப்தில் முழு தகுதியானவர், உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
ஆனால் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததும், கப்திலை ஐ.பி.எல் 2018ம் ஆண்டிற்கான தொடரில் எந்த அணியும் விலை கொடுத்து வாங்காததும் குறிப்பிடத்தக்கது.