ரோஹித் சர்மா எடுத்த அந்த முடிவு முட்டாள்தனமானது ; மும்பை அணியை விமர்சித்த முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் !!

ரோஹித் சர்மா எடுத்த அந்த முடிவு முட்டாள்தனமானது ; மும்பை அணியை விமர்சித்த முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன்…

கடைசி நேரத்துல ஆர்சருக்கு பந்துவீச கொடுத்து ரோஹித் சர்மா மிகப்பெரிய முட்டாள்தனம் செய்துவிட்டார் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் 5 முறை டைட்டில் பட்டத்தை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2023 ஐபிஎல் தொடர் மிகவும் மோசமான ஒன்றாக அமைந்தது என்றே கூறலாம்.

மற்ற பலம் குறைந்த அணிகள் எல்லாம் தோல்வி அடைந்தாலும் கடைசி வரை போராடி தோல்வி அடைகிறது. ஆனால் அனுபவம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியில் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்துமே மிகவும் மோசமாக உள்ளது.குறிப்பாக மும்பை அணியில் இடம்பெற்றிருக்கும் நட்சத்திர வீரர்களும் இந்த வருடம் மிக மோசமாகவே விளையாடி வருகின்றனர்.

குறிப்பாக மும்பை அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மிக மோசமாக பந்து வீசியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைக்கும் வேகத்தை வெளிப்படுத்தும் ஜோப்ரா ஆர்ச்சர் இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் சுமாராகவே பபந்து வீசியுள்ளார் என்று பெரும்பாலான முன்னால் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ஜோப்ரா ஆர்ச்சர் மோசமாக பந்து வீசியபோதும் ரோஹித் சர்மா அவருக்கு பந்து வீசுவதற்கு வாய்ப்பு கொடுத்தது என்பது மோசமான முடிவு என்று விமர்சித்து பேசியுள்ளார்.

இதுகுறித்து மைக்கேல் வான் பேசுகையில்,“ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் நான்காவது ஓவரை வீசவருவதை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன், நாம் டிபன்ட் செய்ய மிகவும் குறைந்த இலக்கு இருக்கும்பொழுது ஜோப்ரா ஆர்சரை முதலிலேயே பந்து வீசவைத்து விக்கெட் எடுக்க முயற்சி செய்ய வேண்டும், அதற்குப் பின் உங்களுடைய துருப்பு சீட்டை தான் பயன்படுத்த வேண்டும், ஒருவேளை ஜோப்ரா ஆர்சரை பயன்படுத்துவது தான் உங்களுடைய முன்கூட்டிய திட்டம் என்றால் அவருடைய பந்துவீச்சில் சிக்ஸரும் பவுன்டரிகலும் எதிரணி பேட்ஸ்மேன் அடிக்கும் பொழுது உடனடியாக நாம் திட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஆர்சருக்கு முதலிலேயே வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும்..

மேலும்,“இந்த போட்டி ஜோப்ரா ஆர்சருக்கு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாத ஒன்றாகும்,30/0என ஸ்கோர் இருக்கும்போது தன்னுடைய முதல் ஓவரை வீச வந்த ஆர்ச்சர்,செட் ஆன இரண்டு பேட்ஸ்மேன்களுக்கு முன்னாள் வெறும் இரண்டு ஓவர்கள் மட்டும் பந்துவீசி விக்கெட்டை வீழ்த்துவது என்பது எளிது கிடையாது,நானக இருந்தால் அரம்பத்திலேயே ஆர்சருக்கு அதிக வாய்ப்பு கொடுத்து விக்கெட்டை வீழ்த்த முயற்சி செய்வேன்” என்று ஆர்ச்சர் குறித்தும் மும்பை அணி செய்த தவறு குறித்தும் மைக்கேல் வான் தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் (8/04/2023)சனிக்கிழமை இந்திய ரசிகர்கள் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed Ashique:

This website uses cookies.