முன்னாள் ஜாம்பவான் வீரரின் மகன் மும்பை இந்தியன்ஸ் அணியில் தேர்வு

முன்னாள் ஜாம்பவான் வீரரின் மகன் மும்பை இந்தியன்ஸ் அணியில் தேர்வு?

இந்திய அணிக்காக சில ஆண்டுகளுக்கு முன்னர் விளையாடிய வீரர்களின் மகன்கள் தற்போது முதல் தரப் போட்டிகளில் ஆடி வருகின்றனர். சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அண்டர்-19 தொடரிலும், ராகுல் டிராவிட் மகன் சிறு வயது கோச்சிங்கிலும் மேலும் பல வீரர்களின் மகன்களும் கிரிக்கெட் ஆடி வருகின்றனர்.

அதேபோல் முன்னாள் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் நரேந்திர ஹிர்வாணியின் மகன் மிகிர் ஹிர்வாணி தற்போது முதல் தரப் போட்டிகளில் ஆடி வருகிறார். மத்திய பிரதேச அணிக்காக ஆடி வரும் மிகிர் ஹிர்வாணி ஒரு லெக் ஸ்பின்னர் ஆவார். இவர் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியாக வைக்கப்படும் பயிற்சி தேர்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச அணிக்காக 13 முதல் தர போட்டிகளில் ஆடியுள்ளார். அதில் 23.44 சராசரியில் 45 விக்கெட் வீழ்த்தியுள்ளார். லெக் ஸ்பின்னரான மிகிர் தற்போது மும்பை இந்தியன்ஸ் செலக்சன் ட்ரையல்ஸ் ஆடியுள்ளார்.

இதனால் வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடக்கும் ஏலத்தில் இவர் மும்பை அணிக்காக தேர்வு செய்யப்பட்ட வாய்ப்புகள் உள்ளது. இதற்கு முன்னதாக சென்ற வருடமும் ஐபிஎல் ஏலத்தில் இவரது பெயர் இருந்தது. ஆனால் இவரை எடுக்க அணிகள் இல்லை. தற்போது சற்று சீரிய பேட்டிங் திறமையுடனும் வருவதால் இவரை மும்பை அணி எடுக்க வாய்ப்புகள் உள்ளது.

அதேபோல் ஜேந்த வருட ரஞ்சி கோப்பையில் விதர்பா அணிக்காங்க தனி ஆளாக பந்து வீசி வெற்றி பெற வைத்த ராஜனீஷ் ஹிரவாணியும் மும்பை இந்தியன்ஸ் ட்ரையில்ஸ் சென்றுளளார். இதனால் இவரும் மும்பை அணிக்காக தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது. சமீபத்தில் டெல்லி அணிக்கு எதிராக நடந்த ரஞ்சிகோப்பையின் இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி தனது விதர்பா அணிக்கு வெற்றியை தேடி தந்தார் ராஜனீஷ் ஹிரவாணி.

Editor:

This website uses cookies.