ஐபிஎல் நண்பன் விராத் கோலியின் விக்கெட்டை எடுக்க காத்திருக்கும் மொயின் அலி. அதற்க்காக தனித்திட்டம் ஒன்றை வைத்திருப்பதாக பேட்டி அளித்தார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை தோல்வியை தழுவிராத அணியாக திகழ்ந்து வருகிறது. அதே நேரம் போட்டியை நடத்தும் அணியான இங்கிலாந்து ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளிடம் தோல்வியைத் தழுவியுள்ளது.
உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்பாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இருக்கும் என கருதப்பட்டது. இதுவரை இந்திய அணி அதனை சரியாக செய்து வருகிறது. ஆனால் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு செல்வதற்கு தடுமாற்றம் கண்டு வருகிறது.
தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை தொடர்ந்து 9 புள்ளிகளுடன் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது அதேநேரம் 8 புள்ளிகள் இருக்கும் இங்கிலாந்து ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. அடுத்து வரும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழ்நிலை இங்கிலாந்திற்கு ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியை வெல்வதற்கு இங்கிலாந்து வீரர்கள் கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். பயிற்சியின் நடுவே பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மொயின் அலி கூறுகையில், “இந்திய அணியின் ரன் குவிப்பிற்க்கு முக்கிய காரணமாக திகழ்பவர் அணியின் கேப்டன் விராட் கோலி. இங்கிலாந்து அணி அவரை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பட்சத்தில் இந்தியாவை குறைந்த ரன்களில் சுருட்டி விடலாம். ஆனால் அது நினைப்பதை போன்ற எளிதான விஷயமல்ல.
அவரை கட்டுப்படுத்த நான் தனி யுக்தி ஒன்றை கையாள இருக்கின்றேன். ஒரு பந்துவீச்சாளருக்கும் விராட் கோலி போன்ற சிறந்த வீரர்கள் விக்கெட்டை எடுப்பது என்பது பெரிய உத்வேகத்தை கொடுக்கும் என்றும் குறிப்பிட்டார்.
ஐசிசி தரவரிசையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து அணியை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 1999ம் ஆண்டு உலக கோப்பை தொடர்களில் இந்திய அணியை இங்கிலாந்து இதுவரை வீழ்த்தியதே இல்லை.