மீண்டும் ஒருநாள் அணியில் இனைந்த நட்சத்திர இடதுகை வீரர்: ரசிகர்கள் ஜாலி

கொரோனா பரிசோதனையில் தேறிய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமிர் பாகிஸ்தான் அணியில் இணைந்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் ஆக. 5ல் மான்செஸ்டரில் துவங்குகிறது. இதற்காக ஏற்கனவே இங்கிலாந்துக்கு வந்த பாகிஸ்தான் அணியினர், ஐ.சி.சி., வழிகாட்டுதலின் படி தனிமைப்படுத்திக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Britain Cricket – Pakistan v India – 2017 ICC Champions Trophy Final – The Oval – June 18, 2017 Pakistan’s Mohammad Amir celebrates taking the wicket of India’s Virat Kohli Action Images via Reuters / Andrew Boyers Livepic EDITORIAL USE ONLY. – RTS17JYO

இந்நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமிர், கடந்த ஜூலை 24ல் இங்கிலாந்துக்கு வந்தார். ஐ.சி.சி., வழிகாட்டுதலின்படி தனிமைப்படுத்திக் கொண்ட இவருக்கு, 2 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்ததால் சகவீரர்களுடன் இணைந்தார்.

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கான 29 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட்டது. வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 10 வீரர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று முதலில் உறுதியானது. இதனால் கிரிக்கெட் உலகம் அதிர்ச்சியடைந்தது. இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் அணியில் அந்த 10 வீரர்களும் இடம்பெறவில்லை. இதற்குப் பதிலாக 5 மாற்று வீரர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

10 வீரர்களில், ஆறு வீரர்களுக்கும் இருமுறை நெகடிவ் என முடிவு வந்ததால் அனைவரும் இங்கிலாந்துக்குச் சென்றார்கள். பிறகு மூன்று வீரர்கள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு அவர்களும் இங்கிலாந்து சென்ற நிலையில் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் மட்டும் தனியாக பாகிஸ்தானில் மாட்டிக்கொண்டார்.

Mohamed:

This website uses cookies.