ஜூன் 14 ம் தேதி துவங்க இருக்கும் ஆப்கானிஸ்தான் எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து முஹமத் சமி நீக்கப்பட்டார். யோ-யோ பரிசோதனையில் தேர்ச்சி பெற தவறியதால் பிசிசிஐ இந்த முடிவு. இவருக்கு பதிலாக சைனி சேர்க்கப்பட்டார்.
இந்திய வீரர்களுக்கு ஜூன் 3 மற்றும் 4 ம் தேதி ஆப்கானிஸ்தான் எதிரான போட்டியில் ஆடுவதற்கு யோ-யோ உடற்தகுதி பரிசோதனை நடந்தது. இதன் முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில் முஹமத் சமி தேர்ச்சி பெறவில்லை. பிசிசிஐ நிர்வாகம் அறிவித்த குறைந்தபட்ச இலக்கான 16.1ஐ அவரால் எட்ட முடியவில்லை. இதனால் உடனடியாக போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.
முன்பாக, இங்கிலாந்து செல்ல இருக்கும் இந்திய ஏ அணிக்கான தகுதி பரிசோதனையில் சஞ்சு சாம்சன் தேர்ச்சி பெறவில்லை. இதனால் அவர் நீக்கப்பட்டு, முன்னாள் அண்டர் 19 கேப்டன் இஷான் கிஷான் சேர்க்கப்பட்டார்.
தற்போது, முஹமது சமி நீக்கப்பட்டதால், வேகபந்துவீச்சாளர் நவதீப் சைனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நவதீப் சைனி 2017/18 ரஞ்சி கோப்பையில் டெல்லி அணிக்காக விளையாடி, 8 போட்டிகளில் 34 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இந்த சிறப்பான ஆட்டத்தினால் தற்போது ஆப்கானிஸ்தான் எதிராக ஜூன் 14 ம் தேதி துவங்க இருக்கும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கிறார்.