இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறித்து தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மோர்நே மோர்க்கல் மற்றும் இர்பான் பதான் ஆகிய இரு வீரர்களும் பாராட்டி பேசியுள்ளனர்
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தென் ஆப்ரிக்காவின் செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வரும் இந்திய அணியின் பும்ரா தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி இன்று வரை சிறப்பாக விளையாடி வருகிறார்.
அயல்நாட்டு மைதானங்களிலும் தனது வேகத்தால் அசத்தி வரும் பும்ரா குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர், அந்த வகையில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர்களான இர்பான் பதான் மற்றும் மோர்கள் ஆகிய இருவரும் பும்ரா குறித்து பாராட்டிப் பேசியுள்ளனர்.
மோர்கள் முதலில் பேசியதாவது, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தற்பொழுது மிகச் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் தலைவராகத் திகழ்கிறார், எப்படிப்பட்ட மைதானமாக இருந்தாலும் பும்ராவின் வேகம் எப்பொழுதும் போல் சிறப்பாக உள்ளது, அவருடைய பந்துவீச்சை எதிர்கொள்வது என்பது பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது, எந்த ஒரு பேட்ஸ்மேனாக இருந்தாலும் பும்ரா போன்று பந்து வீசும் ஒரு பந்து வீச்சாளரை எதிர்கொள்வது என்பது அவர்களுக்கு கெட்ட கனவு போல தான் இருக்கும், பும்ரா ஒரு மிக சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று பாராட்டிப் பேசியுள்ளார்.
இதனை அடுத்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் பேசுகையில், பும்ரா ஆக்ரோஷமாக பந்து வீசுவது மற்றும் சிறந்த ஆங்கிளில் பந்து வீசுவது பேட்ஸ்மேன்களுக்கு மிகப் பெரும் தொல்லையாக இருக்கிறது அவரால் இன்ஸ்விங், அவுட்ஸ்விங், யார்க்கர்போன்ற அனைத்து விதமான வரியேஷன்களிலும் பந்துவீச முடியும், மேலும் அவர் தென்னாப்பிரிக்கா மைதானத்தில் சிறப்பாக பந்து வீசுவது பார்ப்பதற்கே சந்தோஷமாக உள்ளது என்று இர்பான் பதான் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது